நம்பிக்கை (பிப்ரவரி 14 க்கான கதை)
சூபி ஞானியான ஜுன்னேய்த்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர், ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது, தூரத்தில், ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப் பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான். அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார். அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.
அப்பெண் அவரது தாயார். ஜுன்னேய்த் கூறினார்,''நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே? உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை
செய்ய முடியுமா? இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான
தண்ணீர். மது அல்ல. புட்டி மட்டும் மது இருந்த புட்டி.''
சீடன் மன்னிக்கும்படி அவர்காலில்
விழுந்தான்.
ஜுன்னேய்த் கூறினார்,''இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.
உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. நீ பிற சீடர்களைப்போல நடக்க முயற்சிக்கிறாய். கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை
இப்பொழுதோ, எப்பொழுதோ
நிச்சயம் உடைந்து போகும். உனது அன்பு ஒரு முயற்சி.
உண்மையான அன்பு ஒரு முயற்சியாக
இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக
இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''
நன்றி : ஓஷோவின் கதைகள்
காதலும் ஒர் உணர்வின் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை யாராலும் எப்போதும் அழிக்க முடியாது.
இருமன மொழியை மண நாளையாய் அறிவிக்க மவுன மொழியின் அரங்கேற்றம் தான் காதல்.