மாரடைப்பு(Myocardial infarction)
இதயத்திசு இறப்பு (Myocardial infarction), இதயத்தின் ஒரு பகுதிக்கு குருதியோட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. இது பெரும்பாலும் இதயத் தமனியில் தடை ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலாஸ்ட்ரால் போன்ற கொழுப்புப் பொருட்களும், வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்வதால் அத் தமனியின் உட்புறம் குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் ஆக்சிசன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில் கடினமாய் உழைக்கும் வேளையில் நெஞ்சு வலி ஏற்படும். இந்த வலி ஓய்வு எடுக்கும் போது அல்லது நைட்ரேட் மாத்திரைகள் சாப்பிடும் போது இதய இரத்த ஓட்டம் சீரடைந்து வலி குறையும். மருத்துவ உதவி உரியகாலத்தில் பெறப்படாவிட்டால் நிரந்தரமான இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு இதயத் தசைகள் இறந்து விடும். ஓய்வு எடுத்தாலும் இந்த வலி குறையாது.
அறிகுறிகள்
நெஞ்சை அழுத்துவது...