வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, June 24, 2015

ஜுன் 21 - உலக யோகா தினம் இணைப்பு


சர்வதேச யோகா தினம் 21.06.2015 அன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் யோகா என்னும் அரிய கலையை உலகுக்கு தந்த நாடு இந்தியா.
அந்த கலையை கவுரவிக்கும் வகையிலும், அது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தும் விதத்திலும் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, 177 நாடுகளின் ஆதரவுடன், ஜூன் 21–ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி அறிவித்தது.
அந்த வகையில் முதலாவது சர்வதேச யோகா தினம், நேற்று உலகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி வாழ்த்து
முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர்சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டார்.
அதில் அவர், ‘‘முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி உலக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். யோகாவை நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற நாம் உறுதி மேற்கொள்வோம்’’ என குறிப்பிட்டிருந்தார்.
டெல்லியில் கொண்டாட்டம்
தலைநகர் டெல்லியில் ராஜபாதை, வழக்கமாக குடியரசு தின கொண்டாட்டத்தில் களை கட்டும். நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டியும், அது களைகட்டியது. ராஜபாதையே, யோகா பாதையாக மாறியது.
சர்வதேச யோகா தின கொண்டாட்டம், பயிற்சியில் பங்கேற்பதற்காக நள்ளிரவில் இருந்தே அனைவரும் வந்து குவிய தொடங்கினர். பிரதமர் நரேந்திர மோடி காலை 6.40 மணிக்கு அங்கு வந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், யோகா குரு பாபா ராம்தேவ், மத தலைவர்கள், யோகா ஆசிரியர்கள் அமர்ந்தனர்.
36 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பிரதமர் திரு.மோடி அவர்கள் மாணவர்கள் மற்றும் யோகா பயிற்சி யாளர்களுடன்





















ராஜாபாதையில் யோகா செய்யும்போது
சியாச்சின் மலையில் இந்திய இராணுவ வீரர்கள்

ஜூன், 21 - 2015 அன்று டெல்லி ராஜாப்பாதையில் நடைபெற்ற யோகா சாதனையை பதிவு செய்ய வந்த கின்னஸ் சாதனை பதிவாளர்கள் திரு மார்கே ப்ரிகட்டா மற்றும் விக்டோரியா ஜூலி டீவீடி (ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 35000க்கும் மேற்பட்டவர்கள் யோகாசனம் செய்ததை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது)


அப்போது அவர் கூறியதாவது:
இந்த ராஜபாதை, யோகா பாதையாக மாறும் என யாரேனும் கற்பனை செய்தது உண்டா? நாம் ஒரு (சிறப்பு) நாளை கொண்டாடவில்லை. அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குவதற்கு மனித மனங்களை பயிற்றுவிக்கிறோம்.
பெரும்பாலான மக்களுக்கு யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டும்தான். இது மிகப்பெரிய தவறு. அப்படியென்றால், சர்க்கஸ்களில் வேலை செய்கிற குழந்தைகளை நாம் யோகிகள் என அழைக்க முடியும். எனவே யோகா என்பது உடலை வளைப்பது மட்டுமல்ல.
ஐ.நா. சபைக்கு நன்றி
யோகா என்பது உடல் உறுப்புகளின் அசைவு மட்டுமல்ல. உடலும், மனமும், ஆன்மாவும் முழுமையாக ஒன்றிணைகிற ஒரு நிலைதான் யோகா. யோகா, வாழ்வில் ஒவ்வொரு நாளின் அங்கம்.
உலகின் எந்த பகுதியும் இன்றைக்கு யோகா இல்லாமல் இல்லை.
இந்த நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததற்காக ஐ.நா. சபைக்கும், தீர்மானத்துக்கு ஆதரவாக நின்ற நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதயம், மனம், உடல், ஆன்மா இணக்கமாக வேலை செய்ய வேண்டும்.
பதற்றமில்லா உலகம் காண யோகா வழிநடத்துகிறது. நல்லிணக்கத்தின் செய்தியை அது பரப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி யோகாசனம் செய்து எல்லோரையும் கவர்ந்தார்

நடிகை கரீனா கபூர்

நடிகை லாரா தத்தா

பாப் பாடகி மடோனா
 திமுக தலைவர் கருணாநிதி தான் மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யோகா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் யோகாதினத்தைப் பற்றியும், பல ஆண்டுகளாக தான் மேற்கொண்டு வரும் யோகா பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், ஜூன் 21ம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மனித குலத்தின் சிறந்த உடல்நலத்திற்கு வழி அமைத்துக் கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பணியில் முக்கிய வெற்றியாகவே கருத வேண்டும்.

பிரான்ஸ்- ஈபில் டவர் அருகில்
ஆப்கானிஸ்தானில்
மலேஷியாவில்

சவுத் கொரியாவில்
தைவானில்
சீனாவில்

Print Friendly and PDF

Tuesday, June 16, 2015

ஜுன் 21 - உலக யோகா தினம்


ஜுன் 21 - உலக யோகா தினம்

ஒரு உயர்ந்த குறிக்கோளை நோக்கி அடியெடுத்து வைக்க முதலில் அதற்க்கான வழி முறைகளை அறிந்து,அதனை செயல் படுத்த, அதனை அடைய தேவையான சிந்தனை தேவை. அதேபோல் மனிதன் பிறந்ததே வாழத்தான். அதற்கு அவனுக்கு நீண்ட ஆயுள் தேவை. அதனால் அவன் அந்த ஆயுளை அதிகரிக்க அவனது உடலையும் உயிரையும்  அழிவிலிருந்து காப்பாற்றி கொள்ள உணவு, உறைவிடம், உடை,உடற்பயிற்சி, மருத்துவம், மருந்து என பல முறைகளில் செயல்பட முதலில் எடுத்துக் கொண்டது உணவுக்கு பிறகு  உடல்-பயிற்சியைத்தான். அதில் முதன்மையானது சிறுசிறு மூச்சுப் பயிற்சிதான்.  இவையே பின் பல முறையாய் பயின்று உடல் பயிற்சியோடு கூடி யோகா என மாறியது.

யோகம் என்ற பதம் யுஜ்என்ற வேர்ச்சொல்லில் இருந்து வருவது. யுஜ் என்றால் இணைவது. மனிதன் எவற்றோடு இணைய வேண்டும் என்பதில்தான் அடிப்படை  உள்ளது.

நான்கு வகையான மனிதர்கள் உள்ளதாக உளவியல் ஆராய்ச்சியாளர்கள் வகுத்து உள்ளனர்

எதையும் ஆராய்பவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், எதையும் மனதால் பார்ப்பவர்கள்,செயல்புரிபவர்கள். இந்த நான்கு வகை மனிதர்கள் பின் பற்றும் வழி முறைகள் பலவாக இருப்பினும் கீழ் காணும் இந்த நான்கு யோகம்களில் எல்லாமே அடங்குகிறது.

காரியங்களை சுயநலமின்றி பொது நலத்துக்காகச் செய்தால் அது கர்ம யோகம்.

நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருசேரத் திரட்டி, ஓர் இஷ்டதெய்வத்திடம் குவித்து, அவருக்காகவே நம் ஐம்புலன்களின் காரியங்களைத் திருப்புவதே பக்தி யோகம்.

நாம் நமது உடல்ரீதியான, மனரீதியான, புத்திரீதியான வாழ்க்கையை மட்டும், அவை தரும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பற்றிக்கொண்டு மட்டும் வாழாமல் அதற்கு மேல் அல்லது அதன் அடி ஆழத்தில் உள்ள ஞானப் பெட்டகமாக உள்ள நம் உண்மை நிலையை   அறிய வைப்பது ஞான யோகம்.

அந்த உண்மை நிலையை உடல் தவம், மனத்தவம் செய்து மூச்சுக் காற்றான பிராணனை அடக்கி அதன்மூலம் ஆன்மாதான் நாம் என்பதை உணர்த்துவது ராஜ யோகம்.


மனிதன்  தனக்குத் தானே இணக்கமாக இருக்க வேண்டும். அவனது அறிவு ஒன்றாகவும், மனது வேறொன்றாகவும் செயல் படும்போதுதான் அவன் தவறுகளைச் செய்கிறான். தான் செய்வது தான் சரி என்று வாதாடுகிறான். அப்படிப்பட்ட மனிதன், தானே தனக்கு எதிரியாக, தன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான். அடுத்து, மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் மனிதன் இணக்கமின்றி இருக்கிறான்.மேலும் வாழ்க்கையில் எந்த உயர் நோக்கமும் இல்லாதவனாக, தனக்குத் தானே ஒரு சுமையாக இருந்து மறைகிறான்.


இம்மனிதன் தன் உடலை,மனதை கட்டுபடுத்த இந்த யோகா தேவையானதாக இருக்கிறது. இது வெறும் ஆன்மீகம், மதம், மூடநம்பிக்கை எனும் ஒருவழிப்பாதை அல்ல. மனிதன் மனிதத் தன்மைக் கொள்ளவும், தன் இனம் தவறு அற்று செயல்படவும் யோகா அவசியமே.


Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms