வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, June 26, 2013

எது ராஜ தர்மம் ?

குறுங்கதை 100 என்ற நூலில் நான் படித்து ரசித்தது.
நாட்டில் ஊழல்கள் மலிந்தன.

ஆட்சியாளர்கள் மக்களை கொள்ளையடித்தனர். வதைத்தனர் . உயிர்ப்பலியும் அதிகமானது .

அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின.
மக்களைக் கொல்லாதே என்றன .

இது உள் நாட்டு விவகாரம் இதில் பிற நாடுகள் தலையிடுவது உலக அரசியலுக்கு முரண்பாடானது .

அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன. 

உயிர் போகும் வேளையில் போராடாமல் மடிவதைவிட போராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர். 

ஆயுதங்களை கையில் எடுத்தனர். 

அச்சமடைந்த ஆட்சியினர் வெளிநாடுகளுக்கு அவசர செய்தி அனுப்பினர். 

புரட்சி வெடித்து விட்டது ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியை காப்பாற்றுங்கள் “

Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms