வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, May 27, 2015

மனிதாபிமானத்தின் முன்


சிறுவயதில் திருவான்மியூரில் கலாஷேத்ராவின் தென்னைதமரத் தோட்டம் உள்ளது. அதில் விடுமுறை நாட்களில் நான் எனது நண்பர்களுடன் விளையாடி பொழுது கழிப்பது வழக்கம். அதேபோல் அன்றும் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பேட்டிங் செய்த பையன் பந்தை ஓங்கி விளாச பந்து கொஞ்சம் தூரத்தில் சென்று  செடிகள் நிறைந்த அடர்ந்த பொந்தில் விழ அதை நண்பன் ராஜன் தேடப் போக சற்று நேரத்தில் அவனது அலறல் கேட்க அனைவரும் அவனை நோக்கி சென்றோம். அவன் வலது காலை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தான். அப்பொழுது தான் நாங்கள் அவனை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால் உடனே என்ன செய்யவேண்டும் என்பதை விட பாம்பின் அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனோம்.

சற்று தூரத்தில் இருந்து திரு கிருஷ்ணய்யர் எங்களை நோக்கி வந்தார். வந்தவர் பாம்பு கடித்து இருப்பதும் அதனால் ராஜன் வலியால் துடிப்பதும் உடனே உணர்ந்தவர் எங்களிடம் ஒரு கயிறை தேடித் தர சொன்னார். ஆனால் அது எதற்க்காக என்பது புரியவில்லை,நாங்கள் பாம்பை எண்ணி அனைவரும் கயிறை தேட நான் உள்பட முற்படவில்லை.

அவர் அவசரம்! சீக்கிரம்! என்று கத்திக்கொண்டே இருந்தார்.சிலர் அவர் கத்தியதால் தேடுவதுப் போல் மெல்ல தப்பிக்க எண்ணி சம்பவ இடத்தை விட்டு நகர்ந்தனர்.

திரு கிருஷ்ணய்யர் (எப்போதும் சட்டையணியாதவர்) அப்போது டக்கென்று தனது பூணூலை கழற்றி ராஜனது காலில் பாம்பு கடிக்கு சற்று மேலே இறுக்கிக் கட்டி்னார். பயப்படாதே ஏதோ தண்ணிப் பாம்புதான் கடிச்சி இருக்கு,வா ஆஸ்பிட்டலுக்கு போலாம்.என்று அழைத்து சென்றார்.

நாங்களும் (எஞ்சி இருந்தவர்கள்) கூடவே சென்றோம்.

அது ஒரு சின்ன க்ளினிக்.நாங்கள் அவசரமாக வருவதைக் கண்டு நோயாளிகள் விலக திரு.கிருஷ்ணய்யர் முதலில் உள்ளே நுழைய
டாக்டரும் அவசரத்தை உணர்ந்து எங்களை எதிர்க்கொண்டார்.

டாக்டரிடம் விபரங்களை திரு.கிருஷ்ணய்யர் தெரிவித்தார். ராஜனை சிகிச்சை படுக்கையில் படுக்க வைத்து டாக்டர் அவன் காலை கவனித்து அவனது பாம்புக்கடிக்கு மேலே பூணூலால் கட்டியிருப்பதை பார்த்து  திரும்பி திரு.கிருஷ்ணய்யரை நோக்கி வெரிகுட் நல்ல வேலை செஞ்சிங்கே மிஸ்டர் கிருஷ்ணய்யர். இந்த பையனோட உயிரை காப்பாத்த உங்களடோ பூணூலையே தந்து இருக்கீங்கஎன்றார். அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது  திரு.கிருஷ்ணய்யர் கயிறுக்கு பதிலாக அவர் தனது பூணூலை கட்டி பாம்புக் கடியின் விஷம் பரவாமல் தடுத்து இருக்கிறார்.

அதற்குள் விஷயம் ராஜனது அப்பா அம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் கேள்விப்பட்டு வந்து விட்டனர். டாக்டர் அவர்களிடம் திரு.கிருஷ்ணய்யர் அவர்களின் சமயோசித வேலையை சொல்ல அனைவரும் பாராட்டினர். திரு.கிருஷ்ணய்யர் பெருமிதத்துடன் வெட்கப்பட்டார்.

அய்யர் சாதியினருக்கு பூணூல் எவ்வளவு முக்கியம், புனிதாமானது என்பதை நாம் அறிவோம்.

அன்று பேஸ்புக்,வாட்ஸ்அப், ஈமெயில்,செல்போன் எல்லாம் இல்லை  ஆனால் கேட்டவர்கள் எல்லாம் திரு.கிருஷ்ணய்யரை  பாராட்டினர். இது நடந்தது 1978 ம் வருடம்.

மனிதாபிமானத்தின் முன் மதமும் மதச் சின்னங்களும் ஒன்றும் பெரியதல்ல என்பதை உணர்த்தியது இந்த செயல்.

அதேப் போல் இன்று,

நியூசிலாந்ததில் சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது. 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில் இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர்.

ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் ஹர்மன் சிங் படுப்பதையும் அறிந்தனர். உடனே, வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையை தொடர்பு கொண்டு, லாரி நிறைய வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும், கொண்டு வர செய்து, தங்களுடைய அன்பளிப்பாக வழங்கினர்.சில தினங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை காண சென்ற ஹர்மன் சிங்குக்கு, சிறுவனின் பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

ஹர்மன் சிங்கின் செயல் குறித்த செய்தி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், ஆயிரக்கணக்கானோர் பாராட்டிஉள்ளனர்.

மனிதாபிமானத்தின் முன் மதம் முக்கியமில்லை நல்மனம்தான் சிறந்தது என்பதை மீண்டும் அறிவுறித்திய நிகழ்ச்சி இது.


Print Friendly and PDF

Thursday, May 14, 2015

பத்தாவது ரத்தினம்


ஒற்றுமையாய் இருந்த ஒன்பது ரத்தினங்களுக்குள் ஒருநாள் “நம்மில் யார் பெரியவன்? என்ற சண்டை வந்தது.
 
GEMS
நானே பெரியவன் என்றது வைரம்.

இல்லை நானே பெரியவன் என்றது வைடூரியம்

அட கடவுளே! இந்த சண்டையை தீர்த்து வைக்க ஒரு வழியும் இல்லையா? என்றது கோமேதகம்.

இருக்கிறது என்றது மரகதம்.

என்ன? என்றது நீலம்

நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம்,அந்த போட்டியில் எவன் வெற்றியடைகிறானோ அவனே பெரியவன் என்று நாம் ஒப்புக்கொள்வோம்! என்றது மரகதம்.

என்ன போட்டி அது? என்று எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து கேட்டது வைரம்.

பேராசை பிடித்த மனிதனை,நம்மில் எவன் போதும்! போதும்! என்று சொல்ல வைக்கிறானோ, அவனே நமக்கெல்லாம் பெரியவன் .என்ன சொல்கிறீர்கள், நீங்கள்?என்று கேட்டுவிட்டு எல்லாவற்றையும் சேர்ந்தாற்போல் ஒரு பார்வை பார்த்து வைத்தது மரகதம்.

சரியான யோசனை! சரியான யோசனை! என்று எல்லா ரத்தினங்களும் ஏககாலத்தில் தலையை ஆட்டின.

சரி நீ போ முதலில்! என்றது மரகதம் வைரத்தை நோக்கி.

வைரம் சென்றது; ஆனால் வாட்டத்துடன் திரும்பி வந்தது.

என்ன? என்று கேட்டது மரகதம்.
முடியவில்லை!, அப்பனே முடியவில்லை!, அவனை திருப்தி செய்ய முடியவில்லை என்று கையை விரித்தது வைரம்.

சரி நீ போ இரண்டாவதாக! என்றது மரகதம் வைடூரியத்தை நோக்கி.

வைடூரியம் சென்றது; ஆனால் அதுவும் வாட்டத்துடன் திரும்பி வந்தது.

என்ன? என்று கேட்டது மரகதம்.

முடியவில்லை அப்பனே முடியவில்லை, அவனை திருப்தி செய்ய முடியவில்லை! என்று  வைடூரியமும் கையை விரித்தது.

இப்படியே ஒன்பது ரத்தினங்களும் சென்று தோல்வியுற்று திரும்பிய பிறகு நான் திருப்திப் படுத்துகிறேன் அவனை! என்றது ஒரு குரல்.

அது யாரப்பா அது ? என்று எல்லா ரத்தினங்களுமே குரல் வந்த திசையை நோக்கின திரும்பின.

நான்தான் பத்தாவது ரத்தினம் அப்பா! என்றது அது.

பத்தாவது ரத்தினமா, பைத்தியம் பிடித்த ரத்தினமா? என்று மரகதம் கேட்டது.

வீண் பேச்சு எதற்கு? வேண்டுமானால் என்னை அனுப்பி பார் என்றது அது.

சரி வா போவோம்! என்றது மரகதம்.

நீங்களும் என்னுடன் வருகிறீர்களா என்ன? என்று கேட்டது அது.

ஆமாம், உன்னுடைய லட்சணத்தை பார்க்க வேண்டாமா? என்றது கோமேதகம்.

சரி வாருங்கள்! என்று பத்தாவது ரத்தினம் கிளம்ப மற்ற ஒன்பது ரத்தினங்களும் அதை பின் தொடர்ந்தன.

பாவம் மனிதன் பத்தாவது ரத்தினம் அவனுக்கு முன்னால் இருந்த இலையில் கொட்டு! கொட்டு என்று கொடியதும்தான் தாமதம், போதும், போதும்! என்று அலறவே ஆரம்பித்து விட்டான்.

தேவலையே! உன் பெயர் என்னப்பா? என்று தன் உடம்பை குறுக்கிக் கொண்டு கேட்டது மரகதம்.

ஜீவரத்தினம்! அரிசி என்றும் அன்னம் என்றும் அடியேனை அழைப்பதுண்டு! என்றது அது.

RICE 

Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms