வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, August 31, 2017

தினமும் செய்ய வேண்டியவை

இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சியில் நமது கைகளில் ஆறாவது விரலாய் இருப்பது அலைபேசி எனும் செல்போனே.
இதிலிருந்தே நாம் நமது அன்றைய பல அலுவல்களை அதிகபட்சமாக செய்கிறோம்.செய்ய கட்டயாப்படுத்தப்படுகிறோம்.
ஒரு சிலர் ஒருபடி மேலே போய் அலைபேசியிலேயே,சிரிப்பதும் அழுவதும்,கோபப்படுவதும்,விளையாடுவதும் அரங்கேறிப் போய் எங்கும் எப்பொழுதும் அலைபேசிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். மனித மனமே உணர்வுகளால் மட்டுமே வாழ்வை பயணித்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வுகளை நல்வழிப் படுத்த நாம் சில முயற்சிகளை அலைபேசியின் செயல்மொழிகளை கொண்டு நாம் தினமும் செய்யலாம். இதோ அவை :


1) சோகத்தை ~ Delete செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ Save செய்யுங்க
3) சொந்தங்களை ~ recharge செய்யுங்க
4) நட்புகளை ~ Download செய்யுங்க
5) எதிரிகளை ~ Erase செய்யுங்க
6) உண்மையை ~ Broad cast செய்யுங்க
7) துக்கத்தை ~ switch off செய்யுங்க
8) வேதனையை ~ Not reachable செய்யுங்க
9) பாசத்தை ~ In coming செய்யுங்க
10) வெறுப்பை ~ out going செய்யுங்க
11) சிரிப்பை ~ In box செய்யுங்க
12) அழுகையை ~ out box செய்யுங்க
13) கோபத்தை ~ Hold செய்யுங்க
14) இன்முகத்தை ~ send செய்யுங்க
15) உதவியை ~ ok செய்யுங்க
16) இதயத்தை ~ vibrate செய்யுங்க

-Arrow Sankar

  Print Friendly and PDF

Saturday, August 26, 2017

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு !

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு !

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;  
வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;
எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;
அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;
விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்;


திருமுறைகளில் விநாயகர்
'காணாபத்யம்என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதிஎன்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம்! முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமையும்.

ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என்று, 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார்.

விநாயகர் தரும் வரங்கள்
''துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று ஔவையார், விநாயகப் பெருமானை வேண்டி சங்கத் தமிழ்ப் பாடல்கள் பாடும் புலமை பெற்றார். விநாயகர் அகவலில் யோக தத்துவத்தையும், விநாயகர் தரும் இக, பர சௌபாக்கியங்களையும் பாடியுள்ளார். 'முன்னை வினையின் முதலைக் களைந்து, எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறுஎன்று போற்றுகிறார் ஔவையார்.
செல்வாக்கும் சொல்வாக்கும் தருவான், வெவ்வினையை வேரறுக்க வல்லான், நம் வேட்கை தணிவிப்பான் விநாயகன்.
'வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்ய தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவுஎன்கிறார் சேக்கிழார்.
விருத்தாசல புராணம், பாதாள விநாயகரின் பெருமைகளைப் பாடுகிறது. 'உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைதொழ வேண்டும்என்கிறது இந்தப் புராணம்.

விநாயக புராணம்
திருவாவடுதுறை ஆதீன கச்சியப்ப முனிவர் விநாயக புராணத்தை விரிவாகப் பாடியுள்ளார். இதில் விநாயகரின் தோற்றம், பெருமை, விரதங்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

விநாயகரை வணங்கும் பக்தருக்குத் துன்பமில்லை, வறுமை இல்லை, நோயில்லை, துக்கம், சோகம், மோகங்கள், பாவங்கள், பகைகள் எதுவும் இல்லை என்கிறது இந்தப் புராணம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்
பெண்கள் மட்டுமே விநாயகருக்குச் செய்யும் விரதபூஜை இது. ஆடிச் செவ்வாய் இரவு ஆண்கள் உறங்கிய பின்போ அல்லது ஆண்கள் இல்லாத ஒரு வீட்டிலோ பெண்கள் கூடி, நெல் குத்தி, அரிசியாக்கி, மாவாக்கி, உப்பில்லாது, இளநீரை விட்டுப் பிசைந்து உருண்டை ஆக்கி, நீராவியில் வைத்து எடுத்து, கன்று ஈனாத பசுவின் சாணத்தில் பிள்ளையார் செய்து, பூஜை செய்து, விடிவதற்குள் விரதம் முடித்து, காலையில் பிள்ளையாரை ஆற்றில் விட்டால் தாலி பாக்கியம் பெருகும், தன தான்யங்கள் வளரும் என்பது ஐதீகம்.

இது, விரத மகாத்மியம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள 46 விரதங்களில், விநாயகரின் அருள் கிடைக்கச் செய்யும் ஒரு விரதம் ஆகும்.

தெய்வநாயகன் விநாயகன்
கடவுளர்களே போற்றும் கடவுள், கணபதி! திரிபுரங்கள் எரிக்கச் செல்லுமுன் தந்தை சிவன் தன்னைப் போற்றி வணங்க மறந்ததால், 'அச்சிவன் உறைரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரன்விநாயகர்.

தம்பிக்கு வள்ளியை மணம் செய்து வைத்தவர்;
மதுகைடபர்களை வெல்ல மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்;
கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சம்பாசுரனை வெல்லவும், பிரத்யும்னனை மீட்கவும் துணை நின்றவர்;
நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாரையூரில் நிவேதனம் உண்டு, தரிசனம் தந்தவர்;
தில்லையில் திருமுறைகள் உள்ளதைக் காட்டி, 12 திருமுறைகளை மீட்டவர்.
விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையார்; திருச்சியில் உச்சிப் பிள்ளையார்; சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர்; திருந்துதேவன்குடியில் நண்டு பூசித்த கர்க்கடக விநாயகர்; திருவீழிமிழலையில் படிக்காசுப் பிள்ளையார். இவரை மணிமேகலை காப்பியம் 'கரங்கவிழ்ந்த காவிரிப்பானைஎன்று போற்றுகிறது.  

நோய் தீர்க்கும் விநாயகர்
பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான்.

திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது
'ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற்றினால்,
வாராத புத்தி வரும், பக்தி வரும், புத்திர சம்பத்து வரும், சக்தி வரும், சித்தி வரும்தான்
என்று புத்தி, சத்தி, சித்தி பெற விநாயகனைத் தொழச் சொல்கிறார்.

சுயக் கட்டுப்பாடு கொண்டவர் விநாயகர். ஐம்புலன்தன்னை அடக்கும் யானை கட்டும் கயிறு, அங்குசம் இரண்டையும் தானே கொண்டு, மோன நிலையில் தியானம் செய்யும் விநாயகர் யோகம், நாதம், தாளம், ஞானம் எல்லாவற்றையும் தரும் நர்த்தன யோக கணபதி ஆவார்.

லட்சுமி கணபதி காயத்ரி
28 எழுத்து மந்திரம்
'ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத
சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா

குடும்ப க்ஷேம காயத்ரி
'ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மீ கணபதயே
மம மம குடும்பஸ்ய யாவத்ராநாம் துரிதம்
ஹர ஹர க்ஷேமம் குருகுரு ஸர்வசௌபாக்யம்
தேஹி தேஹி ஐம்கம் கணபதயே ஸ்வாஹா

காரிய ஸித்தி காயத்ரி
'ஓம் க்லெளம் ஸ்ரீ ம் ஸர்வவிக்ன ஹந்த்ரே பக்தானுக்ரஹகர்த்ரே
விஜய கணபதயே ஸ்வாஹா
ஆல், அரசு, இலந்தை, வன்னி மர விநாயகரையும், அத்தி மரத்தின் விநாயகரையும் தொழுது பூசித்தால் முழுப்பலன் பெறலாம். வேழ முகத்தானைப் போற்றுவோம்; வெற்றி பெறுவோம்!

சங்கடஹர சதுர்த்தி விரதம்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடப்பது போல விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெறுகின்றது. மாதத்தில் தோன்றும் பௌர்ணமியை அடுத்து வரும் இந்தச் சதுர்த்தி தினம் மிகவும் விசேஷமானதாகும். சங்கடம் என்றால் "கஷ்டம்" என்று பொருள், ஹர என்றால் "அழிப்பது"என்று பொருள். கஷ்டங்களை அழித்து  இன்பத்தைத் தருவது தான் சங்கடஹர சதுர்த்தி.

காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் இந்த விரதம் மிகப்பழைமையானதும் சக்திவாய்ந்ததுமாகும்.
திருமணத் தடை நீங்க , தோஷங்கள் தீர, குழந்தை செல்வம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க, நோய்கள் குணமாக, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். குறிப்பாக கடன் தொல்லை தீரவும், பித்ருதோஷங்கள் நீங்கவும்  இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்ற விரதங்களைப் போல அல்லாமல் சதுர்த்தி விரதம் மட்டும் மாலை வேளையில் சந்திரன் உதயமாகும் தருணத்தில் திதி வேளையில் தூய்மையான மனதோடு பூஜை செய்ய வேண்டும். நாள் முழுவதும் பால், பழம் , பழச்சாறு போன்ற திரவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலுள்ள விநாயகருக்குப் பிடித்தமான  புன்னை, மந்தாரை, செவ்வரளி, வில்வம், மாதுளம்பூ, ஜாதிமல்லி, மகிழம்பூ, பாதிரி, சம்பங்கி, மாம்பூ, அரளி, பவளமல்லி, குருந்தை,கண்டங்கத்திரிப்பூ, தும்பை, ஊமத்தை, முல்லை, மாதுளம்பூ, கொன்றை, செங்கழுநீர், தாழம்பூ போன்ற  இருபத்தோரு மலர்களில் எவையேனும் ஒன்றைச் சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும்.

விநாயகருக்கு மிகவும் பிடித்த வில்வம் பழத்தையும் அவருக்குப் படைக்கலாம். வில்வமரத்தை வீட்டில் வளர்ப்பதினால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பார்கள். இதுமட்டுமல்ல ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், புண்ணிய நீர் ஆடிய பலனும் கிடைக்கும் என்பார்கள்.

அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று ஆர்ச்சனை செய்து , கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.
கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது நமது வேண்டுதலுக்கு துகுந்தாற் போல கீழேயுள்ள 21 இலைகளில் எவையேனும் ஒன்றைக் கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

1.  நியாயம் கிடைக்க - மாவிலை
 2.  வாழ்வில் இன்பம் கிடைக்க - வில்வம் இலை
 3.  இல்வாழ்க்கை இனிக்க - கரிசலாங்கண்ணி
 4.  கல்வியில் வெற்றி பெற - இலந்தை
 5.  பொறாமை நீங்கி பெருந்தன்மை பெருக - ஊமத்தை
 6.  வசீகரம் - நாயுருவி
 7.  தைரியம் , வீரம் விவேகம் பெற - கண்டங்கத்தரி
 8.  வாழ்கையில் வெற்றி பெற - அரளி
 9.  உயர்பதவி, நன்மதிப்பு  கிடைக்க - அரசு 
10. திருமணத்தடை விலகி நல்ல வரன் அமைய - தவனம்
11. இல்லற சுகம் பெற - மரிக்கொழுந்து
12. செல்வச் செழிப்பு பெற - நெல்லி
13. குழந்தை வரம் பெற - மருதம்
14. கடன் தொல்லையிலிருந்து விடுதலையடைய - அகத்திக்கீரை 
15. சொந்த வீடு, பூமி பாக்கியம் - ஜாதி மல்லி
16. ஞானம் , அறிவு , தன்னம்பிக்கை பெறுவதற்கு - துளசி
17. பேரும் புகழும் கிடைக்க - மாதுளை
18. கருவிலுள்ள சிசுவிற்கு பாதுகாப்பு  மற்றும் வம்ச விருத்தியடைய - எருக்கு
19. சகல வித பாக்கியங்களும் பெற - அருகம்புல்
20. அனைத்துச் சக்தியையும் தாங்கும் இதயம் பெற - தேவதாரு
21. இவ்வுலகில் வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்க - வன்னி 

Arrow Sankar Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms