வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, May 12, 2017

பிளஸ் 2 தேர்வில் எந்த கிரேடு?

பிளஸ் 2 தேர்வில் எந்த கிரேடு?

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு(2017) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். 

ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது. மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கிரேடு வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1180
மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு A கிரேடு வழங்கப்படும். அதனை 1,171 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கிரேடு முழு விவரம்:-


1151
முதல் 1180 வரை - B கிரேடு

1126
முதல் 1150 வரை - C கிரேடு

1101
முதல் 1125 வரை - D கிரேடு

1001
முதல் 1100 வரை - E கிரேடு 

901
முதல் 1000 வரை - F கிரேடு

801
முதல் 900 வரை - G கிரேடு

701
முதல் 800 வரை - H கிரேடு

700-
க்கு கீழ் - I கிரேடு

பிளஸ் 2 தேர்வு முடிவில் 1151 முதல் 1180 வரை மதிப்பெண் பெற்ற 12,283 மாணவர்களுக்கு பிகிரேடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்ற 14,806 பேருக்கு சிகிரேடு வழங்கப்பட்டுள்ளது. 14,806 மாணவர்களுக்கு டி கிரேடும், 95,906 மாணவர்களுக்கு இ கிரேடும் வழங்கப்பட்டுள்ளது. 
Arrow Sankar Print Friendly and PDF

Monday, May 8, 2017

சித்ரா பௌர்ணமி காஞ்சிபுரம் வரதராஜர் நடவாவி உற்சவம்

வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் வரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அந்த வைபவம் நடவாவி உற்சவமாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.


காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து வரதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே தனி. அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடபாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐய்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார். அங்கிருந்து பாலாறு, மீண்டும் செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பெருமாளை அழைத்து வருகின்றார்கள்.

பெருமாளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வருபவர்களுக்கு தனது அழகைக் காட்டி மயக்கிவிடுகிறார் பெருமாள். அவர்கள் மனதில் என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்களோ, அவர்கள் வேண்டாமலேயே பெருமாள் அதை  பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

சுட்டெரிக்கும் வெயிலில் வீதிகளில் நீரை தெளித்து குளிர்வித்து, கோலமிட்டு பெருமாளை வரவேற்கிறார்கள் பக்தர்கள். வழியெங்கும் தோரணங்கள், இளைப்பாற பந்தல்கள் என குதூகலத்தோடு பெருமாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றார்கள். புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார்சாதம் என வழியெங்கும் அன்னதானம் செய்கிறார்கள். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க பானகம், மோர், தண்ணீர் என கொடுக்கிறார்கள்.

நடவாவி கிணறு
வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகின்றது. சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத்தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகின்றார்கள்.

48 மண்டலங்களை குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப் பட்டுள்ளன. 27வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படியும் 27 நட்சத்திரங்களை குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும். 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர், கிணற்றை மூன்றுமுறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. கல்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்குபாலாற்றில் வைத்து பூஜை செய்கிறார்கள். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, அதற்கு பந்தல் போட்டு அபிஷேகம் நடக்கின்றது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார் வரதர்.

பெருமாள் செல்லும் இடங்களில் எல்லாம் திருவிழாவாகவே இருக்கின்றது.

 Arrow Sankar Print Friendly and PDF

Friday, May 5, 2017

நீட் (NEET - National Eligibility and Entrance Test)

நீட் (NEET - National Eligibility and Entrance Test) தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test). அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப்படும்.
தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG)நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப்படும்.
மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.இது அப்படியே தொடரும்.
நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில மாணவர் களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித மாற்றமும்  இன்றி நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.

குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும் கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்  கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு  மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.
மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்கு முறை ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of NEET   is to regulate the seat allotment).
எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடு முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத்  தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில் எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள்  நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.
நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும். அவ்வளவுதான்.
தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக் கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங்கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

`நீட்' தேர்வைப் பொறுத்தவரை மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT) பரிந்துரை செய்துள்ள +1, +2 பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்படும். சிபிஎஸ்இ(CBSE) பாடப்புத்தகங்களைப் படித்தால் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை. தமிழக அரசின் +1, +2 பாடத்திட்டங்கள் தர அளவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட குறைந்ததில்லை. NCERT-யின் தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு அடிப்படையிலேயே தமிழகஅரசுப் பாடத்திட்டங்களும் தயாரிக்கப் பட்டுள்ளன. அதனால்,  தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்தவர் களும் இத்தேர்வை நன்றாக எதிர்கொள்ள முடியும் 
+1, +2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து பாடத்திற்கு 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். மொத்தம் 720 மதிப்பெண்கள்.  ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு மருத்துவப் படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும். தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பிறகு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் மருத்துவப் படிப்பில் சேர  ஒரு தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும். அந்த தகுதி மதிப்பெண்களுக்கு  குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மேனேஜ் மெண்ட்(MANAGEMENT QUOTA) கோட்டாவில் கூட மருத்துப்படிப்பில் சேர முடியாது. 
இந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரின் மதிப்பெண் எவ்வளவோ, அதில் பாதி தான் தகுதி மதிப்பெண். உதாரணத்துக்கு, மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், அதிகபட்சமாக ஒரு மாணவர்  320 மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், தகுதி மதிப்பெண் 160 என்று நிர்ணயிக்கப்படும்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றாலும் தமிழில் இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லை என்பது வருந்தத்தக்கது.

 Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms