வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, July 31, 2015

மந்திரம்

மாலை நேரத்தில் கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு படித்துறையில் தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் யோகேசன்.

தனது மேலாடையை ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம் செய்ய ஆயுத்தமானான் யோகேசன். 

தனது மேல் அங்கியின் உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத்துவங்கினான். கங்கையின் ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.

சில மணித்துளிகள் கடந்தது....

இறைவனே!, என்னை ஆளும் ஈசனே! உன்னருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்...என கர்ண கொடூரமான குரல்வளத்தில் ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் யோகேசன்.

தன்னைவிட முற்றிலும் எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில்  கத்திக்கொண்டிருந்தார்.

குளித்த தேகம், உடலில் ஆங்காங்கே வீபூதி பட்டை, தூய வெண்மையான ஆடை, உட்காரஆசனம், ஜபமாலை என்ற நிலையில் யோகேசன்.

தண்ணீரே பார்க்காத தேகம், உடல் முழுவதும் அழுக்கு, சில மணி மாலைகள் கழுத்தில், தலை முழுவதும் சடையுடன் எங்கோ பார்த்து பெருங்குரலில் கத்தும் அந்த நபர். யோகேசனுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவரை கோபமாக முறைத்தான். 

அவரோ இவனை மதிப்பதாக தெரியவில்லை. தேதோ உளறிக்கொண்டே கைகளை மேலும் கீழும் அசைத்து காற்றில் ஏதோ வரைத்து கொண்டிருந்தார்.

இத்தனை வருடங்களாக தினமும் இங்கே மந்திரம் ஜபம் செய்கிறோம் ஒருவரும் இப்படி இம்சை செய்தது இல்லை. அவரை தவிர்த்துவிட்டு கண்களை மூடினால் அவரின் குரல் அதிக சப்தத்துடன் ஏற்றம் அடைவதை உணர்ந்தான்.

பைத்தியக்காரன் என்று பேசாமல் ஜபம் செய்யலாம் என்றால், வேண்டும் என்றே அவன் குரல் எழுப்புவதை போல யோகேசன் உணர்ந்தான்.

தனது ஜபமாலைகளை கீழே வைத்துவிட்டு அவரின் அருகே சென்றான் யோகேசன். 

ஐயா... தயவு செய்து அமைதியாக இருக்கிறீர்களா... என்னால் ஜபம் செய்ய முடியவில்லை.

அதுவரை எங்கோ பார்த்து உளறிக் கொண்டிருந்தவர் யோகேசனை நோக்கி தலையை சாய்வாக திருப்பி ஜபமா.....அப்படினா?”

மந்திரத்தை தொடர்ந்து கூறுவது

மந்திரமா? அப்படினா?”

யோகேசனுக்கு அவர் விளையாடுவதாகவே பட்டது இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கியவாறு பதில் கூறினான்.

இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம்

ஓஹோ...என்றவாறே எழுந்து திரும்பி படித்துறையின் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார் அவர்...

அவர் நடந்து செல்லுவதை நிம்மதிப்பெருமூச்சுடன் பார்த்தவாறு நின்றான் யோகேசன்.

இரண்டு படிகள் ஏறியவுடன் திரும்பி....

மந்திரத்தில் மட்டும்தான் இறைவனின் சக்தி உண்டா? நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே? உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?” என்றார் அவர்.

டக்கென்று ஒருணம் அவர்  நின்ற திசையை நோக்கி யோகேசனின் உதடுகள் மெல்ல அசைந்தது குருவே சரணம்

கங்கை அமைதியுடன் ஓடிக்கொண்டே .இருந்தது


குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Tuesday, July 28, 2015

அக்னி தீர்த்தக் கரையினிலே

அக்னி தீர்த்தக் கரையின்
கடைக்குட்டி.
பாரதத்தின் ஏவுகணை
நாயகன்.
இளைஞனை ஊக்குவித்த
ஜீவரத்தினம்.
உன் அருமைக் கண்டே
பதவிகள் தந்தோம்
கடவுள் உன் பெருமை கண்டே
சிவலோக பதவி தந்தான்
நீங்கள் இங்கு புதைக்கப்படவில்லை
விண்ணில் விதைக்கபட்டுள்ளீர்.
மீண்டும் வருவீர்கள்
எங்களிடம்
எங்கள் கண்ணீர் துடைக்க!


திரு.APJ.அப்துல் கலாம் அவர்கள் மறைவையொட்டி நான் எழுதிய அஞ்சலி கவிதை.


திரு.APJ.அப்துல் கலாம் அவர்களது ஆன்மா சாந்தியடைய வான்மீகீ பிரார்த்தனை மன்ற சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் - Arrow Sankar

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் புஷ்பாஞ்சலி

பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆனால் அந்த ஆபரணத்தில் இருந்து தோன்றும் ஒளி நம்மை உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவை அறிவு சார் சூப்பர் பவர்ஆக்கவேண்டும் என்ற அவரது கனவு இலக்கை நோக்கி வழிநடத்தும்.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்ட, அன்பு பாராட்டப்பட்டவர், நமது விஞ்ஞானி-ஜனாதிபதி அப்துல்கலாம். சொத்துகளை வைத்து அவர் ஒருபோதும் வெற்றியை மதிப்பிட்டதில்லை. அவரை பொறுத்தமட்டில் ஏழ்மைக்கு மாற்றாக அவர் கருதியது, அறிவியல் மற்றும் மனித ஆற்றலில் உள்ள அறிவுசார் சொத்துகளை தான். 

நமது பாதுகாப்பு திட்டங்களின் கதாநாயகன் (ஹீரோ) என்ற அடிப்படையில் அவர், அளவுகளை மாற்றினார். மனித ஆற்றலின் ஞானி என்ற முறையில் அவர், குறுகிய ஒருதலைசார்பு உணர்வுகளில் இருந்து உயர்ந்த நல்லிணக்க பாதைக்கு செல்லும் வகையில் கொள்கையை தளர்த்தவே அவர் விரும்பினார்.

ஒவ்வொரு மகத்தான வாழ்க்கையும் ஒரு பெட்டகம் போன்றது. நம்மை நோக்கி வரும் அதன் கதிர்களில் நாம் குளிக்கிறோம். அவர் வாழ்ந்து காட்டிய முறைகள் எல்லாம், உண்மை தன்மையின் அடிப்படையிலேயே இருந்தது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், சமுதாயத்துக்கு உகந்த குழந்தைதான். ஏழ்மை எப்போதுமே மாயையை ஊக்குவிப்பது இல்லை. ஏழ்மை என்பது ஒரு கொடூரமான பரம்பரை சொத்து ஆகும். ஒரு குழந்தை அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கனவு காணும் முன்பே அது தோல்வியை தழுவிவிடலாம். ஆனால் அப்துல்கலாம் எத்தகைய சூழ்நிலையிலும் தோல்வி அடைந்ததில்லை. 

அவர், சிறுவனாக இருந்த காலத்திலேயே ஒரு பத்திரிகை போடும் விற்பனையாளராக பணம் சம்பாதித்து, அதன்மூலம் தன் படிப்புக்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் இன்றைய தினம் அதே பத்திரிகைகளில் பக்கத்துக்கு பக்கம் அவரது மறைவு செய்திகள் நிரம்பி உள்ளன. 

அவர் எப்போதும், ‘தனது வாழ்க்கை யாருக்கும் முன்மாதிரியாக இருக்கும்என்று ஆணவத்தோடு சொன்னதில்லை. ஆனால், வறுமையில் வாடும் ஏதாவது ஒரு குழந்தை தனது வாழ்க்கை உருவாக்கப்படுவதில் சில ஆற்றலை பெற்றால், அதுதான் அத்தகைய குழந்தைகளை பின்தங்கிய நிலையில் இருந்தும், ஆதரவற்ற நிலையில் இருந்தும் விடுதலை பெற உதவும். அப்படி ஒரு குழந்தை தான் எனக்கும், அதுபோன்றே குழந்தைகளுக்கும் வழிகாட்டி என்றார். 

அப்துல்கலாமின் குணநலன் கள், உறுதிப்பாடு, ஊக்கமளிக்கும் கண்ணோட்டம் அவரது வாழ்க்கை முழுவதும் ஒளிவிட்டது. அவருக்கு எப்போதுமே, நான் என்ற ஆணவம் கிடையாது. பிறர் புகழ்ச்சிக்கும் அவர் மயங்கியது கிடையாது. 

நற்பண்பு மிக்க மரியாதை உள்ள கூட்டம் என்றாலும் சரி, உலகை சுற்றும் மந்திரிகள் கூட்டம் என்றாலும் சரி, இளைஞர்கள்-மாணவர்கள் உள்ள வகுப்பு அறைகள் என்றாலும் சரி எல்லாமே அவருக்கு ஒன்றுதான். அவரிடம் காணப்பட்ட பெரிய பண்பு என்னவென்றால், குழந்தையின் நேர்மையும், இளைஞரின் வேகமும், பெரியவர்களின் பக்குவமும் கலந்த கலவையாக அவர் இருந்தது தான். இந்த உலகத்தில் இருந்து அவர் பெற்றது குறைவு தான். ஆனால், இந்த சமுதாயத்திற்கு அவர் கொடுத்தது ஏராளம், ஏராளம். 

அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். நமது சமுதாயத்தின் 3 முக்கிய குணநலன்களான சுய கட்டுப்பாடு, தியாகம் மற்றும் உருக்கம் ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழ்ந்தார். அந்த மாமனிதர், முயற்சியின் பிளம்புகளால் ஊக்கப்படுத்தப்பட்டார். நாட்டை பற்றிய அவரது கண்ணோட்டம் எல்லாம் சுதந்திரம், மேம்பாடு மற்றும் வலிமை என்பதின் அடிப்படையிலேயே இருந்தது. நமது சரித்திரத்தை பார்த்து சுதந்திரம் அமையவேண்டும் என்ற அடிப்படையில் இருந்தது. 

ஆனால் அதுவே மனதில் சுதந்திரம் ஆகவும், அறிவாற்றலின் விரிவாக்கமாகவும் இருந்தது. அவர் இந்தியாவை வளர்ச்சியடையாத நிலைமை எனும் பள்ளத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என விரும்பினார். முழுமையான பொருளாதார வளர்ச்சி மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலேயே அவரது ஆசை அடங்கியிருந்தது. 

அரசியல்வாதிகள் தங்கள் நேரத்தில் 30 சதவீதத்தை அரசியல் பணிக்கும், 70 சதவீதத்தை மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் செலவழிக்க வேண்டும் என்று ஞானமிக்க ஆலோசனையை கூறினார். 

இதை பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றி தங்கள் பகுதியில் உள்ள பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விரும்பினார். 3-வது தூணாக வலிமை பற்றி அவர் யோசித்தார். அந்த வலிமை என்பது சண்டை மூலமாக அல்ல, எண்ணங்கள் மூலமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். 

பாதுகாப்பற்ற ஒரு நாடு வளமைக்கான வழியை தேடுவது கிடையாது. வலிமை மரியாதையை தருகிறது. அணுசக்தி மற்றும் விண்வெளி சாதனையில் அவரது பங்களிப்பு உலகத்திலேயே இந்தியாவுக்கு என்று ஒரு தனி இடத்தை கொடுத்தது. 

அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வளர்க்கும் புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி, இயற்கையின் வற்றாத சக்தியை பயன்படுத்தும் வகையில் நாம் செய்யும் முயற்சி தான், அவரது நினைவினை போற்றுவதாக அமையும்.

பல நேரங்களில் பேராசை நமது சுற்றுச்சூழலையே அழித்துவிடுகிறது. அப்துல்கலாம் ஒவ்வொரு மரத்திலும் ஒரு கவிதையை பார்த்தார். நீர், காற்று, சூரியன் மூலம் என்னென்ன சக்திகளை பெறமுடியும்? என்று பார்த்தார். அதே வகையான குறிக்கோள் உணர்வோடு நாம் இந்த உலகத்தை நமது கண்களால் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

மனிதகுலம் தனது உறுதிப்பாடு, ஆற்றல் மிக்க விருப்பம், திறமை மற்றும் துணிவு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும். நாம் எங்கு, எவ்வாறு பிறக்கவேண்டும்? எப்போது மரணம் அடையவேண்டும் என்பன போன்ற முடிவுகளை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை. 

ஆனால் அப்துல்கலாம் தான் எப்படி விடைபெற்றுக்கொள்ள வேண்டும்? என்பதை அவர் விரும்பியவாறே, அவர் மிகவும் நேசித்த மாணவர்கள் முன்னர் வகுப்பறையில் நின்றேச் முடித்துக்கொண்டு விட்டார்.


ஒரு பிரம்மச்சாரி என்கிற வகையில் அவருக்கு குழந்தைகள் இல்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது தவறு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்தல் மூலம், ஊக்கப்படுத்துவதன் மூலம், வலியுறுத்துவதன் மூலம், இருளில் இருந்து வெளியே கொண்டு வருவதன் மூலம் அவர் தந்தையாக திகழ்கிறார்.

அவர் எதிர்காலத்தை பார்த்தார். அதை அடைவதற்கான வழியை காட்டினார். நான் அவர் உடல் கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தேன். அப்போது வாசலிலேயே அவர் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகத்தில் உள்ள சில வரிகள் எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். அந்த வரிகள் எனது மனதை தூண்டின. அவருடைய நற்செயல்கள் எல்லாம், அவரது உடலோடு புதைக்கப்பட போவதில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்வின் மூலமாக, தங்கள் பணிகளின் மூலமாக அவரது நினைவை போற்றுவதாக அமையும். அதனையே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பரிசாக கொடுத்து விட்டு செல்வார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Monday, July 13, 2015

யார் இந்த அபஸ்வரம்?


வெண் பஞ்சு மேகங்கள்
யானை முதுகு மலைகள்
பரதம் ஆடும் நீர் வீழ்ச்சிகள்
கனிகள் பழுத்த மரங்கள்.


பச்சையுடை புல்வெளிகள்
பாம்பாய் நெளியும் கொடிகள்
பகல் நிலவாய் சூரியன்
பளீர் ஒளியாய் வெளிச்சம்.

ஆஹா! ஆஹா! என்ன அற்புதம்
ஆண்டவனின் அருமை சிற்பம்
ஆருயிராய் மீண்டும் மீண்டும்
ஆயிரம் முறை பிறக்கவேண்டும்.

வானம்பாடி பறவை வாழ்த்துரையில்,
வாசம்கொண்ட முல்லை வளைந்தது.
வாலிபதாமரை தடாகத்தில் தவழ்ந்தது.
வாசலில்லாத வானம் வெட்கப்பட்டது.















மயிலும் வானம்பாடியோடு கூட்டானது.
மதன மோகத்துடன் நாட்டியமாடியது.
மழை வரப்போகுதென்று மத்தளமிட்டது.
மண்ணும் புல்லும்  கொஞ்சியது.

மடையர்கள் மண்டையில் களிமண்ணா?
மந்தபுத்தியில் மட கவிதையா?
மந்திகளாடும் கோணங்கி ஆட்டமா?
மனமென்ன புள்ளியில்லா கோலாமா?

யானை மல்லாந்தா படுக்கும்?
அருவி கீழிருந்தா மேலேறும்?
மரம் கவிழ்ந்தா கனி கொடுக்கும்?
புல்வெளியா வானில் இருக்கும்?

நீங்கள் சொல்லும் அற்புதமெல்லாம்,
தலைக் கீழாய் தொங்குகிறது!
நீங்களும் தொங்கி தவிக்கிறீர்!
அறிவீலியாய் ஆட்டம் போடுகீறிர்!

யார் இந்த அபஸ்வரம்?
ஆவலாய் மயிலும் வானம்பாடியும்,
அபத்த குரல் பக்கம் திரும்ப
அரசமரக்கிளையில் வவ்வால் தொங்கியது.





Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Tuesday, July 7, 2015

கருணையே வடிவானவள் - காட்சியருளுபவள்


உலகத்தின் அன்னை கருணையே வடிவானவள். லலிதா சகஸ்ரநாமம் அன்னையை இருமுறை  மாத்ரே நம:  எனத் துதிக்கின்றது. இது கூறியது கூறல் அன்று. முதலில் பொதுவாகத் துதித்தது. இரண்டாவதாகக் கூறியது, எவ்வுயிர்க்கும் எப்பிறப்பிலும் அவளே அன்னை என்றதால் துதித்தது.

அன்பும் கருணையும் மிக்க அன்னை அழகும் இளமையும் ததும்பும் காமாட்சி, இராஜராஜேசுவரி, மீனாட்சி முதலிய வடிவில் உயிர்களுக்கு அருள் செய்கின்றாள். வீரம்,சக்தி வடிவத்தை ஜ்வாலாமுகி, சண்டி முதலிய கோரவடிவில் உயிர்களுக்கு வரும் நலிவுகளை ஒழிக்கின்றாள். பிரபஞ்சத்தைப் புரட்டிப் போட்டுப் புதிதாகப் படைக்கும் அவளுடைய அவதாரம், காளி என்ற வடிவில் புறத்தே கோரமாயினும் அகத்தே கருணையும் அன்பும் நிறைந்ததாகும்.
அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று பண்டாஸூர வதோத்யுக்த சக்திசேனா ஸமன்விதா” (65) என்பதாம். இதற்குப் பண்டாசுரனை சம்ஹாரம் செய்ய அதிவிதமானசக்தியுடன் கூடியிருப்பவள் என்பது பொருள்.

அவ்விதமான பெருமை மிக்க அன்னையை பக்தியுடன் துதிக்கவும் ஆராதிக்கவும் உடனே காட்சி தருபவள் என்பதை எனது நண்பர் திரு கார்த்திகேயன் மனைவி திருமதி ராணிஸ்ரீ மூலமாக காட்சியருளியதே இந்த பதிவு





2015, ஜூன் 28-ந் தேதி என்னிடம் நண்பர் திரு கார்த்திகேயன் (திரு கஜேந்திர பாபு அவர்கள் மூலமாக அறிமுகமானவர்) மற்றும் அவரது மனைவி திருமதி ராணிஸ்ரீ கார்த்திகேயன் அவர்களும் அவர்களது சொந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையினை பற்றி அறியவும் அதை தவிர்க்கவும் ஆலோசனை பெற வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு சில ஆலோசனைகள் மற்றும் பரிகாரப் பூஜைகள் பற்றி விளக்கம் தந்த பிறகு திருமதி ராணிஸ்ரீ கார்த்திகேயன் அவர்களுக்கு மன அமைதிக்காக லலிதா சகஸ்ரநாம (நாமாவளி) பூஜையை சொல்லி தந்தேன்.அதனுடன் செல்வ வரவுக்காக லக்ஷ்மி அஷ்டோத்திர நாமாவளியையும் தந்தேன். இருவரும் நான் சொன்னதை மிக்க தெளிவுடன் கேட்டறிந்து சென்றனர்.

2015, ஜூலை 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் நான் சொன்னதுப் போல் திருமதி ராணிஸ்ரீ கார்த்திகேயன் அவர்கள் லலிதா சகஸ்ரநாம நாமாவளி,லக்ஷ்மி அஷ்டோத்திர நாமாவளியையும் குங்கும அர்ச்சனையாக செய்தார்.

பூஜை முடிந்து குங்குமத்தை எடுத்து வைக்க பார்த்த பொழுது அன்னை லலிதாவின் படத்தில் அர்ச்சனை செய்த குங்குமத்தில் காட்சியளித்தாள். இதோ அந்த படம் ...

பண்டாசுரனை சம்ஹாரம் செய்ய அதிவிதமானசக்தியுடன் ஏழுவிதமான தேவ சக்தியை தோற்றுவித்தாள். அவர்களே சப்தகன்னிகைகள் எனும் சப்த மாதர்களான ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலானவர்கள். இதில் ஸ்ரீ வராஹி மாதாவே அன்னை லலிதாவின் படை தலைவியாவாள். அவளும் இந்த அர்ச்சனை செய்த குங்குமத்தில் காட்சியளிகிறாள். (படத்தை Zoom செய்து பாருங்கள்)









எதனையும் எதிர்பார்த்தலின்றி தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய் எல்லா ஆடம்பரங்களையுந்  துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக்கினியவன், அவன் என்னை எதிலும் காண்பான்.
          பகவத்கீதை - அத்தியாயம் 12,பக்தி யோகம், 16வது ஸ்லோகம்

ஸ்ரீ வராஹி 

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms