வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, September 26, 2014

நவராத்திரி விழா

இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பை பொழியும் உன்னத நிலையின் மாபெரும் சக்தி வடிவம் அன்னையே. அச்சக்தியை போற்றும் சாக்த வழிப்பாட்டில் அன்னையே முதலிடம் பெற்றுகிறாள். இந்த மகா சக்தியை போற்ற ஒவ்வொரு வழிமுறைகள் உள்ளன

Navratri Ki Hardik Shubhkamnaye
Navarathri | Arrowsankar .

மனதில் தோன்றும் இன்பஉணர்வே (ஆசை,கனவு, குறிக்கோள்) அனைத்திற்கும் முதலாய் நிற்கிறது.அதுவே இச்சாசக்தி.

அந்த இச்சாசக்தியை நிறைவேற்ற அதனை நிரந்தரமாக்கி கொள்ள அதனை அடைய தன் புத்தியை (அறிவு,கல்வி,செயல்) வழி வகுக்கும் சக்தியே ஞானச்சக்தி.

இச்சாசக்தியும் ஞானச்சக்தியும் இணைந்து புதிதாய் ஒன்றை (செல்வம்,அதிகாரம்,பதவி) பெற முனைக்கும் சக்தியே கிரியாசக்தி.

இச்சாசக்தி ஞானச்சக்தி மற்றும்  கிரியாசக்தியே நம் வாழ்வின் அனைத்து நிலைகளையும் வழி நடத்தும்.

சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு  சமயங்களையும் சண்மதம் என்னும் பெயரால்அழைத்தனர்.

சைவம் - சிவ வழிபாடு
வைணவம். – திருமால் வழிபாடு,
சாக்தம்சக்தி வழிபாடு,
கா()ணாபத்தியம். – விநாயகர் வழிபாடு,
கௌமாரம் - முருக வழிபாடு,
சௌரம் -- சூரிய வழிபாடு.

இதில் அன்னையை சக்தியாய் வழிபடும் சமயமே சாக்தம் ஆகும்.அன்னையை போற்றும் வழிபடும் மாதமாக சதுர்மாதமான ஆடியில் (சதுர்மாதம்-ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி) ஆரம்பித்து ஐப்பசி வரையிலும் அதற்கான விழாக்களும்,விரதங்களும் நடைபெறுகின்றன.அதில் புரட்டாசியில் வரும் நவராத்திரிவிழா மிக பெரிய விழாவாக நடைபெறுகிறது.

அந்த நவராத்திரி விழா ஒன்பது நாட்காளாய் ஒவ்வொரு வேண்டுதளுக்காகவும் பிரார்த்தனைக்காகவும் நடைபெறுகிறது.அதில் முதல் மூன்று நாள் இச்சாசக்தியாகவும் அடுத்த மூன்று நாள் ஞானச்சக்தியாகவும் அதற்கு அடுத்த மூன்று நாள் கிரியாசக்தியாகவும் பூஜிக்கிறார்கள்.பத்தாவது நாளான தசமியில் முச்சக்திகளையும் உள்ளடக்கி வெற்றி விழாவாக கொண்டாடப் படுகிறது

அவை
நீதியை காக்கவும், தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவும்
ஏவல், பில்லி, சூனியம், தொல்லையில் இருந்து விடுபடவும்
பதவி,வேலை கிடைக்கவும்
தீய சக்திகளை சம்ஹாரம் செய்யவும்
உழைப்பின் முழு பலனையும் பெறவும்
சகல பாவங்களையும் விலக்கிட. வீரத்தை பெறவும்
சகல ஐஸ்வரியங்களையும் பெறவும்
சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபடவும்
கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்கவும்

பிரார்த்தனை,பூஜைகள் செய்யப்படுகிறது.

விவரமாக.....

முதலாம் நாள்:சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். நீதியை காக்கவும், தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவுமே இவள் கோப ரூபமாக காட்சியளிக்கிறாள்.


நைவேத்தியம்: சர்க்கரைப்பொங்கல்.

இரண்டாம் நாள்: அன்னையை, வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி என்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வராஹியின் வரம் அவசியம்.


நைவேத்தியம்: தயிர்சாதம்.

மூன்றாம் நாள்: இறைவியை, இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே. பெரிய, பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.

நைவேத்தியம்: வெண் பொங்கல்.

நான்காம் நாள்: சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக தரிசிக்க வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீய சக்திகளை சம்ஹாரம் செய்பவள். இவளின் வாகனம் கருடன்.

நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாள்: அன்னையை, மகேஸ்வரி தேவியாக வழிபாடு செய்ய வேண்டும். மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழு பலனையும் பெறுவதற்கு அன்னையின் அருளை பெற வேண்டும்.

நைவேத்தியம்: புளியோதரை.


ஆறாம் நாள்: இன்றைய தினம் சக்தியை, கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

நைவேத்தியம்: தேங்காய்ச்சாதம்.


ஏழாம் நாள்: அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடாரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். செந்தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.

நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.

எட்டாம் நாள்: இன்று அன்னையை, நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையை வழிபடுவது சிறப்பு தரும்.

நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

ஒன்பதாம் நாள்: இறுதிநாளான இன்று தேவியை, ப்ராஹ்மி (சரஸ்வதி) ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க, இந்த அன்னையின் அருள் நிச்சயம் தேவை.

நைவேத்தியம்: அக்கர வடிசல்.

1.தமிழ் கலாச்சாரங்களில் நவராத்திரி படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

2.நவராத்திரி விரதம் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

 -Arrowsankar

Wednesday, September 24, 2014

இந்தியனாய் பெருமிதம் கொள்வோம்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INDIAN SPACE RESEARCH ORGANISATION (ISRO)) சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான்விண்கலம் உருவாக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 




ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 

இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.

விண்கலத்தில் உள்ள முக்கிய என்ஜினை நேற்று இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு அந்த விண்கலம் சரியான திசையில் திருப்பி விடப்பட்டது. 

அந்த விண்கலம் தற்போது வினாடிக்கு 22.1 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதிகாலை அந்த பயண வேகம் வினாடிக்கு 4.4 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கள்யான் விண்கலம், 1,350 கிலோ எடை கொண்டது. ரூ.460 கோடி மதிப்பிலானது. (கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிஹோட்டா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹாலிவுட் படமான கிராவிட்டி தயாரிக்கப்பட்ட செலவை விட  மங்கள்யான் தயாரிக்க ஆன செலவு குறைவு என்றும் இது மிகச்சிறந்த சாதனை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) இத்திட்டத்தில் 500 விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்தை "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்" (செவ்வாய் சுற்றுவட்டத் திட்டம்) (MARS  ORBITER MISSION ) என இஸ்ரோ குறிப்பிடுகிறது.




zwani.com myspace graphic comments
www.arrowsankar.blogspot.in

-Arrowsankar

Tuesday, September 23, 2014

முதியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் 05.01.2014


ஒரு குட்டி கதை
ஒரு நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டார்கள். இதனால் அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட்டார்கள்.

பஞ்சத்தைத் தீர்க்க அரசனும் யோசித்தான். அவனுக்கு மிகவும் மோசமான யோசனை தோன்றியது. 

மக்கள் தொகை குறைந்தால் பஞ்சமும் குறையும் என்று நினைத்தான். 

"எழுபது வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேலை செய்யும் ஆற்றல் இல்லை. ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் பஞ்சம் ஏற்படுகிறது. எனவே எழுபது வயதுக்கு மேலிருக்கும் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டான். 

மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். 

அரசனின் உத்தரவை மீற முடியாமல் வீட்டிலிருந்த பெரியவர்களைக் கொன்று புதைத்தனர். 

பிறகும் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. 

மக்கள் தாங்கள் வைத்திருந்த விதை நெல்லை அவித்து, அரிசியாக்கிச் சாப்பிட்டார்கள். 

திடீரென்று மழை வரும் போல் தோன்றியது. 

ஒருவன் மட்டும் தனது தந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த பாதாள அறையில் மறைத்து வைத்திருந்தான். 

அவன் தந்தையிடம் சென்று, "அப்பா! மழை வரும் போலிருக்கிறது. ஆனால் விதைக்க விதை நெல் இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னான். "கவலைப்படாதே மகனே" என்ற பெரியவர் "நீ உன் நிலத்தை உழுது போடு" என்றார். அதன்படி அவனும் நிலத்தைம் உழுதான். 

அடுத்த நாள் மழை பெய்தது. இரண்டு நாட்களில் பயிர் முளையிட்டது. செழிப்பாக வளர்ந்தது. அந்த ஊருக்கே சாப்பாடு போட்டது. 

அரசன் மிகவும் மகிழ்ந்து போய் அவனை அழைத்து வரச் செய்தான். "விதைக்காமல் உன் நிலம் எப்படி விளைந்தது?" என்று கேட்டான். 

என் அப்பா சொன்னபடி செய்தேன். நிலத்தில் பயிர் விளைந்தது. என்றும் தன் தந்தையை வீட்டில் பாதாள அறையில் மறைத்து வைத்திருக்கும் தகவலையும் சொன்னான்.

பெரியவரை அழைத்து வரும்படி தனது வீரர்களிடம் தெரிவித்தான். அவர்களும் போய் அழைத்து வந்தார்கள். 

அரசன் அந்தப் பெரியவரிடம், "விதையில்லாமல் நிலத்தை வெறுமனே உழுது போட்டால் பயிர் முளைக்கும் என்று எப்படி சொன்னீர்கள்?" என்று கேட்டான். 

"எலிகளும், எறும்புகளும் தங்கள் தேவைகளுக்காக தானியங்களைச் சேர்த்து வைத்திருக்கும். அந்நிலத்தை உழும் போது அவை எல்லாம் வெளியில் வந்துவிடும். மழை பெய்ததும், பயிராகி விடும்" என்றும் பெரியவர் சொன்னார்.  

"ஆ, இப்படி அரிய பல யோசனைகளை அனுபவப்பூர்வமாகச் சொல்லும் பெரியவர்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவிட்டுத் தவறு செய்து விட்டேனே.." என்று அரசன் வருந்தினான்.

animated-elderly-image-0010animated-elderly-image-0060 ********************************************************************************
உலக முதியோர் தினத்தினை (அக்டோபர்-01) (International Day of Older Persons) முன்னிட்டு ஜெயம் ஹோம் ஹெல்த்கேர் (JAYAM HOME HEALTH CARE) சார்பில் முதியோருக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்  நடத்தப்படுகிறது.

நாள் : 05.01.2014 (ஞாயிறு கிழமை)
இடம் : ஜெயம் பாலி கிளினிக் & நர்சிங் ஹோம்.
58, மகாத்மா காந்தி சாலை,
திருவான்மியூர்,சென்னை – 600041.

JAYAM POLY CLINIC & NURSING HOME
58, MAHATMA GANDHI ROAD(M.G.ROAD)
THIRUVANMIYUR, CHENNAI-600041.

* இலவச எலும்பு (கால்சியம்) பரிசோதனை

* நிமோனியா தடுப்பு ஊசி(சலுகை விலையில்)

* இலவச கண் மருத்துவ பரிசோதனை

* மருத்துவர்கள் வீட்டில் வந்து பார்க்க இலவச முன்பதிவு
  
> முன்பதிவு செய்ய & தொடர்பு கொள்ள  :           044 - 4558 7536
044 -  4558 7537


அனைத்துலக முதியோர் நாள்

ஐக்கிய நாடுகள் அவை  அறிவித்துள்ளபடி   முதியோர் தினம்  (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

நோக்கம்

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவை களை   நினைவு கூறும் வகையிலும், அவர்களின்  அறிவு, ஆற்றல்  மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

முதியோர் நலன்

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உலக அளவில்

1991 -ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
·                    அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
·                    வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வைப்புகள் வழங்கப் பட வேண்டும்.
·                    அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
·                    சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
·                    சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
·                    மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.

இந்திய அளவில்

பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
இந்த சட்டம் வழங்குவது :
·                    தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் / உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு
·                    உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல்.
·                    கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
·                    மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்.
·                    மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல்.

தமிழ் நாட்டில் முதியோர் நலத்திட்டங்கள்

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகின்றன.
·                    65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
·                    இலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது.
·                    அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.



-Arrowsankar

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms