வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, February 28, 2014

நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம்


சென்னை, பிப். 28 - நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்) சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

சென்னை தியாகாரய நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், இந்த ஏடிஎம்-ஐ திறந்து வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மக்களின் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அஞ்சல் துறை புதிய உத்திகளைக் கையாண்டு உயர்ந்து வருகிறது.

இந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம். 
பத்து நாட்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அஞ்சல் துறையின் இது போன்ற சேவைகளுக்காக ரூ.4,909 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தேன்.

விரைவில் நாடு முழுவதும் 1,55,000 மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதுபோன்ற வசதி மேலும் நான்கு மையங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆறு மாத காலத்திற்கு சோதனை முறையில் செயல்படுத்தப்படும். அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்" என்றார் ப.சிதம்பரம்.

அஞ்சல் துறை ஏடிஎம் சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மையங்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


குசும்பு குடுமியாண்டி: பாஸ் புக் என்ட்ரி போட கொடுத்தா சீல் அடிக்கிற பழக்கத்த முதல்ல மாத்துங்கப்பா.
நன்றி : தினந்தந்தி,தினமலர்

Wednesday, February 26, 2014

மயானக் கொள்ளை


ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள். 

மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார். 

பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். 

இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின. சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

நடனமாடும் நடராஜர் படம் விக்கிரத்தை வீட்டில் வைக்கலாமா?


நடனமாடும் நடராஜர் படம் விக்கிரத்தை வீட்டில் வைக்கலாமா?


நடராஜர் என்பவர், எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன.  நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. 

அவனின்றி ஓர் அணுவும் அசையாது. காற்று வீசுவதும், தண்ணீர் சென்றுகொண்டிருப்பதும், பறவைகள் பறப்பதும், மீன்கள் நீந்துவதும், எறும்பு நகர்வதும்-இப்படி எல்லா விதமான ஆற்றலும் அவரே. இதனாலேயே இவரை பிரபஞ்சகூத்தாடி எனப் போற்றுவது வழக்கம்.
 

இவரை தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால், நமது ஆற்றல் மேம்படும். இப்பேராற்றல் மிக்க நடராஜப் பெருமானை வழிபடுவதினால், உடலாலும் உள்ளத்தாலும் சோர்வு பெற்றிருக்கும் உயிர்கள், சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள் என்பது நமது முன்னோர்கள் கண்ட உண்மை.

பரிகாரம் என்றால் என்ன?


பரிகாரம் என்றால் என்ன?

பரிகாரம் என்றால் நமக்குள்ள கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும். 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள், தீராத நோய் நொடி, வியாபாரம், தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, குழந்தை பாக்ய தடைவழக்குகள், சொத்து தகராறு, திருமணத்தடை, அடிக்கடி விபத்துக்கள் என்று பல்வேறு விதமான கஷ்ட நஷ்டங்களுக்காக நாம் பிரார்த்தனை, நேர்த்திக்கடன்கள், பரிகார பூஜைகள் செய்து கொள்கிறோம்

பயபக்தி என்று சொல்வது ஏன்?


பயபக்தி என்று சொல்வது ஏன்?

பயம் இருக்கும் இடத்தில் தவறு இருக்காது. குறித்த நேரத்தில் பணிக்குச் சென்றுவிட்டால் யாரும் குறைகூற இடமிருக்காது. இப்படி பொறுப்புடன் செயல்படுவதை வேலையில் பயம் இருப்பவர்களிடத்தில் மட்டுமே காணலாம். இது பாராட்டுக்குரிய பயம்.


அதுபோல், இறைவனுக்கு பூஜை செய்யும் போது அதில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிரத்தையுடன் செய்தால் பக்தி முழுமை பெறுகிறது.

இந்த சிரத்தையையும் ஒருவித பயம் என்று கூறலாம். அதாவது, நாம் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் தவறு ஏற்படாமலிருக்க, முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்வதை பயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மனபீதியைக் குறிக்கும் பயத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது. எனவே, பயபக்தியுடன் வழிபடுங்கள். 

சக்தி கரகம் என்றல் என்ன?


சக்தி கரகம் என்றல் என்ன?


ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள். 
மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார். 


பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். 

இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின. சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

காலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய்யலாமா?


காலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய்யலாமா?
இயலாத பட்சத்தில் செய்யலாம். ஆனால், காலை10.30 மணிவரை தேவகாலம் எனப்படுகிறது. இதற்குள் பூஜைகளை முடிப்பதே விசேஷம்.

இறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

வெளிச்சமான பகுதியில் வெளிச்சத்தைப் பார்ப்பது அவ்வளவு சந்தோஷம் தராது. ஒரு கோயில் திருவிழா நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நம் மனம் அலங்கரிக்கப்பட்ட பூக்களையும், மாலைகளையும், வண்ண விளக்குகளையும் காண்பதிலேயே மனம் லயித்திருக்கும். கச்சேரிகள், பாட்டுகள் என அமர்க்களப்பட்டு போயிருப்போம்.




 ஆனால் இருட்டாக இருக்கின்ற கருவறையில் எண்ணெய் தடவிய அந்த கருங்கல் சிலைக்கு முன்பு கற்பூர ஆரத்தியோ அல்லது நெய் விளக்கோ காட்டுகிற பொழுது கண்கள் பளபளக்க உதடுகள் மினுமினுக்க அதனுடைய உயரமும் அகலமும் தெரியவர, நம் கண்ணுக்குள் தனியாக அந்த உருவம் காட்சியளிக்கிறது. 

இருட்டில் ஒளியை தரிசிப்பது என்பது இன்னும் நெருக்கமாக மனதை அங்கு கொண்டு போய் வைக்கிறது. நம் முன்னோர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். எதனால் உங்கள் மனம் ஒன்றாகக்கூடும் என்பதை நன்றாக கவனித்து உங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Tuesday, February 25, 2014

அவி, ஆகுதி, சமித்துகள் இவைகளுக்கு என்ன பொருள்?


அவி, ஆகுதி, சமித்துகள் இவைகளுக்கு என்ன பொருள்?

ஹோமம் நடத்தும் சாஸ்திரிகள் அடிக்கடி அவி, ஆகுதி, சமித்துகள் என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் இவைகளுக்கு என்ன பொருள்?

மிகவும் சாதாரணமான பொருள்களுக்கும், புனிதமான பொருள்களுக்கும் வெளித்தோற்றத்தில் வேறுபாடு இல்லை என்றாலும் மறைமுகமான வேறுபாடுகள் உண்டு. கண்ணுக்கு தெரியாத பல சக்திகள் அவற்றில் நிறைந்திருக்கும். இதை பொருட்களுக்கு மட்டுமல்ல, வேறு பலவற்றிற்கும் பொருத்தி சொல்லலாம். உதாரணமாக நானும் நீங்களும் பிறந்தால் அது சாதாரண பிறப்பு. அதுவே ஒரு பெரிய மகானோ, இறைவனோ தாயின் வயிற்றில் இருந்து பிறப்பெடுத்தால் அதன் பெயர் அவதாரம். நாம் ஒரு சாதாரண மனிதனை சென்று பார்த்தால் அதுவெறும் பார்வை தான் இறைவனையோ துறவியையோ சென்று பார்த்தால் அதை பார்த்தல் என்று கூறக்கூடாது. தரிசனம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மகான் காலமாகி விட்டால் அதன் பெயர் முக்தி. நீங்களும், நானும் காலமானால் அதை இறப்பு, சாவு என்று சர்வசாதாரணமாக சொல்லலாம்.

இதே போன்றது தான் அவி, ஆகுதி, சமித்து என்ற வார்த்தைகள். சமித்து என்றால் காய்ந்த குச்சிகள் என்பது தான் பொருள். அதை குச்சி என்று சொல்லாமல் சமித்து என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. காய்ந்து போன மரக்கட்டைகளை சமைக்க பயன்படுத்தினால் அதை விறகு என்போம். அதே கட்டைகளை, குச்சிகளை யாகத்திற்கோ, ஹோமத்திற்கோ பயன்படுத்தினால் அதன் பெயர் சமித்து. அவி என்பதும் தானியங்களால் செய்யபடுகிற ஒரு வித உணவு. ஆகுதி எனப்படுவதும் உணவுகளை பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பதாகும். இங்கே இவை அனைத்தும் இறைவழிபாடான யாகங்களுக்கு பயன்படுவதனால், புனித பெயர்களை அடைகிறது. ஒரு பொருளை புனிதமானது என்று நம்பிக்கையோடு தொட்டாலே அதில் இல்லாத புனிதம் இறைவன் அனுகிரஹத்தால் வந்து விடுகிறது. 

விளக்கம் :யோகி ஸ்ரீராமானந்த குரு


சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Friday, February 21, 2014

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.


சென்னை (21.02.2014) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழக முதலைமைச்சர் திரு ஜெயலலிதா அவர்கள் திறந்து வைக்கிறார்கள்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
உயர்தர மருத்துவ வசதிகள்
ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் உட் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்திடவும் முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எய்ம்ஸ்க்கு இணையாக
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, உயர்சிகிச்சை தேவைப்படுகின்ற பல்வேறு நோய்களுக்கும் ஏழை எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிறப்பு சிகிச்சை பெறும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம், உயர் சிறப்பு மருத்துவமனையாக (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி) மாற்றி அமைக்கப்படும் என்றும், இந்த மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்றும் முதல்அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19.8.11 அன்று சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்த கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக 32 கோடியே 90 லட்சம் ரூபாயும், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்க 110 கோடியே 24 லட்சம் ரூபாயும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
9 உயர் சிகிச்சை பிரிவு
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்புப் பிரிவுகளோடு, 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் 2 அறுவை அரங்குகள், முதல் தளத்தில் 2, ஐந்தாவது தளத்தில் 6 மற்றும் ஆறாவது தளத்தில் 4 என மொத்தம் 14 அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் பயன்பாட்டிற்காக, தரைத் தளத்திலிருந்து 6–வது தளம் வரை, சாய்தளப் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 300 கழிப்பறைகள் தவிர, கூடுதலாக 212 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
சிறப்பு வசதிகள்
இங்குள்ள 17 மின்தூக்கிகள், படுக்கையுடன் கூடிய நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் உள் நோயாளர் பிரிவு, மயக்க நிலை மீள் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளுக்கு கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மைய ஆய்வகம், ரத்த வங்கி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கேத்லேப், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு போன்ற உயர் மருத்துவ வசதிகளும், மருத்துவமனையின் தேவைகளுக்காக கூடுதல் மின்சார பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட மருத்துவ வாயுக்கள் வைப்பு அறைகள், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு, சலவை நிலையம், சேவை துறை போன்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் பிரிவுக்கு தேவைப்படும் கட்டில்கள் படுக்கைகள், தீவிர மையத்திற்கான கட்டில்கள் மற்றும் தேவைப்படும் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன.
திறந்து வைத்தார்
இம்மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை புற ஆதார முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, தற்போது இந்தப் பணிகளில் 150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் நோயாளிகள் செல்வதற்கு வசதியாக, மின்கலத்தால் செயல்படும் கார்கள் வாங்கப்பட்டுள்ளன. முழு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனையின் உட்புறம் 150, வெளிப்புறம் 10 என மொத்தம் 160 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்புக்காக 200 அகத் தொலைபேசி (இன்டர்காம்) வசதிகளும், 500 உள்ளூர் தொலைபேசி இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 83 மருத்துவர் பணியிடங்களும், 232 மருத்துவம் சாரா பணியிடங்களும், 20 கோடியே 73 லட்சம் ரூபாய் தொடர் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வித் தகுதியுடன், பல்லாண்டு பணியாற்றிய அனுபவமிக்க திறன் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு, உயர் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவக் கருவிகள் உதவியுடன், நல்ல காற்றோட்டமான சுகாதாரமான சூழ்நிலையில், உயர்சிகிச்சை அளித்திடும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்அமைச்சர் ஜெயலலிதா 21–ந் தேதியன்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில், மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு உயர் சிறப்பு சிகிச்சை வழங்கிடும் மையமாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படும்.
திருச்சி, திருநெல்வேலி
மேலும், திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு கட்டிடம்; சென்னை மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசினர் தாய்சேய் நல மருத்துவமனையில் 53 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் கட்டிடம்; சென்னை குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு 18 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம்;
சென்னை மருத்துவக் கல்லூரியில் 5 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மண்டல மூப்பியல் மருத்துவ மையம்; சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்காக 2 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம்; திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களுக்கு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்;
தரம் உயர்த்தப்பட்ட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்; 100 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், என 253 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவமனை கட்டடங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ரூ.401 கோடி திட்டம்
மேலும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவையை முதல்அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். ஆக மொத்தம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவினால் திறந்தும், தொடக்கியும் வைக்கப்பட்ட பணிகளின் மொத்த மதிப்பு 401 கோடியே 14 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலாளர் எம்.சாய்குமார், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சிறப்புப் பணி அலுவலர் டாக்டர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திர ரத்னூ, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) ஆர். கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி :மாலைமலர்,தினமணி,தினத்தந்தி

Tuesday, February 18, 2014

தமிழின் தமிழ் சாமிநாத அய்யர்


ஆங்கிலேயனுக்கு அடிமைப் பெற்று இருந்த இந்தியாவின் தென் திசையில் நடந்தது.

தலையில் கட்டுக்குடுமி,காதில் கடுக்கன்,அவன் நெற்றியில் திருநீறு,ஒளி உமிழும்  கண்கள் கொண்ட சிறுவன்.அந்த பையன் மேலே என்னப் படிப்பது என்பது விவாதம்.

கூடத்தில் சாய்நாற்காலியில் சாய்ந்திருந்த குடும்பப் பெரியவர் குரல் உயர்ந்தது, இதப்பார்... ஒண்ணு சமஸ்கிருதம் படி...இல்லாட்டி இங்க்லீஷ் படி.  இங்க்லீஷ் படிச்சா இந்த லோகத்திலே நன்னா இருக்கலாம்,... சமஸ்கிருதம் படிச்சா.. இங்க இல்லேன்னாலும் பரலோகத்தில சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்க போறே? .

தமிழ் படிக்கப் போறேன் என்றான் சிறுவன்.

ஏன்? என்று உறுமினார் பெரியவர்.

இங்க்லீஷ் படிச்சா இங்கே நன்னா இருக்கலாம், சமஸ்கிருதம் படிச்சா அங்கே நன்னா இருக்கலாம், தமிழ் படிச்சா ரெண்டு இடத்துலேயும் நன்னா இருக்கலாம். என்று பளிச்சென்று சொன்னான் அந்த சிறுவன்.

அன்று அந்த சிறுவன் தமிழ் படித்ததால் இன்று தமிழே நன்றாக இருக்கிறது.

அன்றைய சிறுவன் சாமிநாதன் தான்  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்.
**

பிப்ரவரி19, 1855ஆம் ஆண்டில்  கும்பகோணத்துக்கு  அருகே உள்ள உத்தமதானபுரம் சிற்றூரில் வேங்கட  சுப்பைய்யர் மற்றும் சரசுவதி அம்மாள் அவர்களுக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத்  தமிழ்க் கல்வியையும்இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில்  தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில்  கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர்  சென்னை  மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.


உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில்   சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம்  சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார். 

இராமசாமி முதலியார் உ.வே.சாவுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதிஅக்காலக்  கட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடி களையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார்.

பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.
சங்கஇலக்கியங்கள்காப்பியங்கள்புராணங்கள்சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்
வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்புதியதும் பழையதும்நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

நன்றி : தமிழ் விக்கிபீடியா, சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் புத்தகம்

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
1.பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2.வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. 
3.சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4.
பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. 
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. 
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. 
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. 
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9.தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10.
ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது. 
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது. 
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது. 
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது. 
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது. 
16.அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது. 
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது. 
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது. 
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22.
கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் சிவாயநம மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23.
கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம். 
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25.
கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது. 
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது


சில கேள்விகளும் பதிலும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms