வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Saturday, September 29, 2012

மகாத்மா என்ற காந்தி


மகாத்மா என்ற காந்தி

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல்கள் 

1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.

மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர்ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924 மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உறுதி காப்பார்.

காந்தியடிகள் இறந்ததும், நாடு முழுவதும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் மொத்தம் 2, 338 நாட்கள் (ஆறு ஆண்டுகள்) சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

காந்தியடிகளுக்கு நான்கு மகன்கள். ஹரிலால் (1888ம் ஆண்டு பிறந்தார்), மணிலால் (1892ம் ஆண்டு பிறந்தார்), ராம்தாஸ் (1897ம் ஆண்டு பிறந்தார்) மற்றும் தேவதாஸ் (1900ம் ஆண்டு பிறந்தார்).

தனது நெருங்கிய நண்பரான லியோ டால்ஸ்டாய்க்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். நட்பின் அடையாளமாக, தனது ஆசிரம தோட்டத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநகரங்களின் பிரதான சாலைகளின் பெயர் எம்ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) என்பதாகத்தான் இருக்கும்.

குழந்தையாக மோகன்தாஸ்
படிமம்:Young Gandhi.jpg
வக்கீலாக
படிமம்:Gandhi costume.jpg

கஸ்தூரிபாய் அவர்களுடன்
7 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
பொதுமக்களுடன்
11 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

உப்பு சத்யாகிரகத்தில்,தண்டி யாத்திரையில்
16 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

உப்பு எடுக்கும் மஹாத்மா
18 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

மஹாத்மா நேருவுடன்
24 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
ஜின்னாவுடன்
படிமம்:Jinnah Gandhi.jpg
மஹாத்மாவின் பிரபலமான புன்சிரிப்பு
28 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)

9 - க்கு திருவிழா


உலகம் முழுவதும் 6 என்ற எண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக, பழமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சீனாவில் இந்த எண்ணை யின் என்ற தீய சக்திகளின் உருவமாக கருதி தூற்றுகின்றனர். அதே நேரம், 9 என்ற எண்ணை தெய்வாம்சம் பொருந்திய யாங் என்ற எண்ணாக மதித்து கொண்டாடுகின்றனர். குறிப்பாக, ஆண்டின் 9ம் மாதமான செப்டம்பரில், 9ம் எண்ணைப் போற்றும் வகையில் சோங்யாங் என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். 

இந்த ஆண்டு 9ம் மாதத்தில் வரும் 9ம் தேதி இரட்டை அனுகூலம் என்பதால், இந்த நாளில் மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இந்த நாளில், ஒன்பது அடுக்குகளாக தயாரிக்கப்பட்ட காவோ என்ற விசேஷ கேக்கை மக்கள் படையலிட்டு உண்பர். இந்த கேக், மகிழ்ச்சியையும் உடலுக்கு நல்ல சக்தியையும் அளிப்பதாக சீன மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்த திருவிழாவின் போது பூக்கும் ஒரு வகை பூக்களை பெண்கள் அனைவரும் தலையில் சூடிக் கொள்கின்றனர். மலர்ந்திருக்கும் அந்தப் பூவின் இலை, கிளைகளை தங்கள் வீட்டு ஜன்னல்களில் தொங்க விடுகின்றனர். இதன் மூலம், இடையூறுகள் ஏற்படுத்தும் தீய சக்திகள் தங்களை நெருங்காது என்பது அவர்களது நம்பிக்கை.

Chinese culture

  • Nine is strongly associated with the Chinese dragon, a symbol of magic and power. There are nine forms of the dragon, it is described in terms of nine attributes, and it has nine children. It has 117 scales - 81 yang (masculine, heavenly) and 36 yin(feminine, earthly). All three numbers are multiples of 9 (9x13=117, 9x9=81, 9x4=36)[2] as well adding up individually to 9 (1+1+7=9, 8+1=9, 3+6=9).
  • The dragon often symbolizes the Emperor, and the number nine can be found in many ornaments in the Forbidden City.
  • The circular altar platform (Earthly Mount) of the Temple of Heaven has one circular marble plate in the center, surrounded by a ring of nine plates, then by a ring of 18 plates, and so on, for a total of nine rings, with the outermost having 81=9×9 plates.
  • The nine-rank system was a civil service nomination system used during certain Chinese dynasties.


Wednesday, September 26, 2012

எனக்கு பிடித்த மகாபாரதம்


நமது இராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தது மகாபாரதம். மகாபாரதத்தின் சில சுருக்க கதைகளை   பல முறை பல பத்திரிகைகள்,கதை புத்தகங்கள், டிவி பட்டிமன்றங்கள், கோவில் நிகழ்ச்சிகள் என படித்தும் கேட்டும் அறிந்துள்ளேன். இதன் மூலமாக  மகாபாரதத்தின் முழுமையை படிக்க ஆர்வம் ஏற்பட்டது. 
   
        திரு.ராஜாஜி அவர்கள் எழுதிய  மகாபாரதம், திரு.பி.என் .பரசுராமன் அவர்கள் எழுதிய  மகாபாரத கதைகள் மற்றும் பலர்   எழுதிய புத்தகங்களை படித்தேன். ஆயினும் எனக்கு சில விபரங்கள் தெளிவடைய வைக்கவில்லை. அதற்கு பதிலாக குழப்பங்களையே தந்தது. இக்குழப்பங்களை நீக்க பலரிடம் கேட்ட  பொழுது என்னை பலர் கிண்டல் செய்தனர். வயசானவங்க, சாமியாருங்க, தெரிஞ்சுக்க வேண்டியது உனக்கு எதுக்குப்பா? என என்னை திசை மாற்றினர்.  வேறு ஏதாவது வழியில் விளக்கம் கிடைக்குமா என்ற நேரத்தில் எனது நண்பர் திரு.திலீப் சந்தன் மூலமாக துக்ளக் ஆசிரியர் திரு.சோ  அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது” என்ற இரு பாகம் கொண்ட புத்தகம் கிடைத்தது. அந்த புத்தகத்தினை படிக்க பல மாதங்களானது.

ஆனால் துக்ளக்ஆசிரியர் திரு.சோ  அவர்கள் பல இடங்களில் தற்போதைய நிலவரங்களை,நிகழச்சிகளை மேற்கோள் காட்டி விளக்கி இருந்தார் . அவை தற்போது நடக்கின்ற காலநிகழ்வுகளை துல்லியமாக பல வருடங்களுக்கு முன்னேரே எழுதி இருந்தது என்னை ஆச்சிரியமுட்டியது. உதாரணமாக ஆட்சி அமைக்க கூட்டணி அமைப்பது, நட்பு கட்சி நண்பரே கூட்டணி மாறுவது, ஆட்சிக்காக  எதிர் கட்சியினர் மீது பழி போடுவது, மாறுபட்ட கருத்து உடையவரே, தனது நலனுக்காக மாற்று கருத்தை ஏற்று கொள்வது, தம்முடைய பலவீனங்களை மறைக்க, மற்றவரின் பலவீனத்தை சுட்டி காட்டுவது என பல நிகழ்வுகளும் சொல்லப்பட்டு இருக்கிறது.அப்பா,அம்மா,அண்ணன்,அக்கா தங்கை, தம்பி,கணவன்,மனைவி நண்பன்,எதிரி,முதலாளி,வேலைக்காரன்,எப்பிடி இருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம், தர்மம் எது ?, சட்டம் எது ? என்பதற்கு விளக்கம். இன்னும் பல உள்ளன.எனவே இதன் சாரத்தினை தெரிந்து கொள்ள எனக்கு தெரிந்த வரையிலான நடையில் எழுதி உள்ளேன். என்னை மிகவும் கவர்ந்த விசயங்களை அப்படியே காப்பியடித்ததுப்போல் எழுதி உள்ளேன்.இதில் ஏதாவது குறைகளோ தவறுகளோ இருந்தால் திருத்தி கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன்.

என்றும் அன்புடன் 
-வான்மிகீயூர் L.L.சங்கர்





மஹா பாரதம்  படிக்க, டவுன்லோட் செய்ய

கிளிக் செய்யவும்




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms