வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, November 25, 2014

படகோட்டி பிரார்த்தனை


ஒரு கடலோர நகரில் ஒரு வயதான ஆனால் திறமையான படகோட்டி இருந்தார். 
தினமும் படகில் மக்களை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது அவரது தொழிலாகும்.
ஒரு நாள் சில இளைஞர்கள் அவரது படகில் பயணம் செய்தனர். படகை கிளப்பும் முன் படகோட்டி கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார்.

கடலும் வானமும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்த அவரை பயணிகள் சிரித்து கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் படகோட்டி படகை கிளப்பினார். 
படகு நடு கடலை அடைந்தபோது திடீரென்று புயல் வந்தது.
படகு மேலும் கீழும் ஆடி தத்தளித்தது. பயந்து போன பயணிகள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தனர். படகோட்டியையும் பிரார்த்தனை செய்ய அழைத்தனர். அதற்கு படகோட்டி இப்பொழுது படகை சரியாக செலுத்துவதே எனது கடமையாகும். அதை மட்டுமே செய்வேன் என்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு புயல் திசை மாறி சென்றது. கடலும் அமைதியானது. அதுவரை படகு கவிழாமல் திறமையாக அதை ஓட்டிய படகோட்டி, துடுப்பு தள்ளுவதை நிறுத்தி விட்டு கடவுளுக்கு நன்றி கூறி பிரார்த்தனை செய்தார். இப்பொழுது, மற்றவர்களும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

Print Friendly and PDF

Thursday, November 20, 2014

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது

மாதிரி தோற்றம்

பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினரான இஸ்கான்அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவானுக்காக மிகப்பெரிய கோவிலை ரூ.300 கோடி செலவில் கட்ட முடிவு செய்து உள்ளனர். பிருந்தாவன் சந்திரோதய மந்திர்என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் உயரம் 700 அடியாக இருக்கும். 

கோவில் கட்டி முடிக்கப்படும் போது இது உலகில் உள்ள எல்லா கோவில்களையும் விட மிக உயரமானதாக இருக்கும். இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி நடந்தது. மேலும் நேற்று கோவிலில் நடந்த அனந்த சேஷ ஸ்தாபன பூஜையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார். 

மகாபாரத இதிகாசத்தின்படி பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவான் எவ்வாறு வசித்தாரோ அதுபோன்ற சூழல் உணர்வை ஏற்படுத்தும் விதமாக 26 ஏக்கர் நிலப்பரப்பில் 70 அடுக்குமாடிகளைக் கொண்டதாக இந்த கோவிலை கட்டுவதற்கு இஸ்கான் அமைப்பினர் தீர்மானித்து உள்ளனர். கோவிலின் 700 அடி உயரத்திற்கு மேலே சென்று பார்க்கும் விதமாக கூண்டு வடிவ மின்தூக்கி வசதியையும் அமைக்க இருக்கிறார்கள். 


மேலும், வேத கால இலக்கியத்தில் எவ்வாறு பல்வேறு கிரகங்களின் இயக்கநிலை இருந்ததோ அதே போன்ற உணர்வை பிரதிபலிக்கும் வகையில், கோவிலில் முப்பரிமாண ஒலி மற்றும் ஒளி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கோவிலின் திட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், 

இந்த கோவிலில் கிருஷ்ண லீலாஎன்ற பெயரில் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இங்கே
இசை நீரூற்று,
புல்வெளித் தோட்டம்,
யமுனா படகு சவாரி,
பாரம்பரிய கிராமம்,
பசுக்களை பராமரிக்கும் கோசாலை,
பாரம்பரிய அருங்காட்சியகம்,
பகவத் கீதை கண்காட்சி
ஆகியவற்றையும் பார்க்கலாம். 

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பிருந்தாவன் கோவில் கட்டி முடிக்கப்படும்என்று தெரிவித்தனர். 

கோவிலின் விசேஷ பூஜையை நேற்று தொடங்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், ஆன்மிக நெறிமுறைகளை இந்த உலகிற்கு தெரிவிக்கும் புகழ் பெற்ற மையமாக இந்த பிருந்தாவன் கோவில் திகழும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்த கோவிலை மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், எம்.பி.க்கள் ஹேமமாலினி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Print Friendly and PDF

Saturday, November 15, 2014

ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:

ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:

பஞ்சாங்க சுத்தியுள்ள சனி, செவ்வாய், திரயோதசி திதி ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாளில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.


ஸ்ரீதன்வந்த்ரி பகவான், விஷ்வக்சேனர், ஆயுள்தேவி வர்தனீ தெய்வங்களை கலசங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சித்தரத்தை, அதிமதுரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் கலந்து ஒன்றாக்கிப் பொடி செய்து, சுத்த நீருடன் கலந்து, கலசங்களில் சேர்த்து முறைப்படி பூஜிக்க வேண்டும்.


9
செங்கற்களை செவ்வகமாக வைத்து யாக மேடை அமைத்து64 யாக மூலிகைகளுடன் நவ சமித்துகள், சீந்தில் கொடி, நாயுருவி, குங்கிலியம் ஆகியவற்றுடன் நெய் சேர்த்து அக்னி ஹோமம் செய்ய வேண்டும்.

1.
ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
பரம புருஷாய சுக சௌக்ய வர்த்தநாய ரோக நாசநாய
ஆயுர் விருத்தி கராய ஒளஷத ரூபிணே மம ரோகான் மோசய மோசய
சர்வ வியாதி நாசாய ஹும்பட் விஷ்ணவே ஸ்வாஹா


2.
ஓம் ஹ்ரீம் க்லீம் தன்வந்தரயே
அம்ருத ரூபாய அம்ருதோத்பலாய
வியாதி நாசாய ஆயுர் விருத்தி காரணாய மம
த்ரேக சௌக்யம் குருகுரு ஸ்வாஹா


3.
ஓம் ஆயுர்தேவதாயை,
வித்மஹே விஷ்ணு ரூபாய தீமகி
தந்நோ தன்வந்தரி ப்ரசோதயாத்


இந்த மந்திரங்களைக் கூறி ஹோம பூஜை முடித்ததும்

பூர்ணாஹுதி (ஸ்ரீதன்வந்த்ரி காயத்ரியால்) செய்து, தூப-தீப நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு, கையில் துளசி மற்றும் நீலோத்பல மலர்களை எடுத்துக் கொண்டு, கீழ்க்காணும் மந்திரத்தை 5 முறை சொல்லி, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும்.


ஓம் அச்சுதானந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருதா

ரோகான்மே நாசாய அசேஷான் ஆஸு தன் வந்தரே ஹரே


வீடு வாங்குவதற்குப் பத்திரப் பதிவு செய்வோம். பத்திரப் பதிவு அலுவலகத்தில் நமது பெயரில் பத்திரம் பதியப்படுகிறதா என்று கவனமாக கவனிப்போம். 

ஆனால், நம் உடல் ஆரோக்கியத்தை பத்திரமாகக் கவனிக்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஒருவரது ஜாதகத்தில் ஆயுள் பாதக நிலை வரும் நேரத்தில், எளிதான பிரயோக விதி ஒன்றை, கடைப்பிடித்து நமது ஆயுளைப் பத்திரப்படுத்தலாம். இதை, ஆயுள் பத்திரம் என்றும் சிறப்பித்துச் சொல்லலாம்.

Print Friendly and PDF

மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்


மாத்ரு பஞ்சக  ஸ்லோகங்கள்


''
அம்மா   எனக்கு  சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப  விருப்பமாக  இருக்கிறதே''

என்  கண்ணேஇருப்பது  நீ  ஒருவனே.  உன்  தகப்பனாரும்  என்னை விட்டுச் சென்று விட்டார்.  பல  வருஷம் தவமிருந்து  வடக்கு நாதன்  அருளால்  நீ பிறந்தாய்.  கண்ணை  இமை காப்பது போல் உன்னை  வளர்த்தது நீயும்  என்னை விட்டுபிரிந்து  போவதற்காகவாஇதற்கா  பெற்றேன்.   நீ  சந்நியாசியாவது  நான் உன்னை  உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?

நீ  தாய்  என்பதோ  நான்  ஒரு நேரத்தில்  உன்  மகன்  என்பதோ  பிரிபடும்  உறவோஉடலால்  பிரிந்தாலும்  உள்ளத்தால் நாம்  இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம்.உன் மனத்தில் இருக்கும்  அந்த  இறைவன்  தான்  என் மனத்திலும்  இருப்பவன்அல்லவா.எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு நிபந்தனையுடன்   சன்னியாசியானான்.

நீ  என்  மரணத் தருவாயில்  என் அருகில்  இருக்க வேண்டும். உன் கையால் தான் எனக்கு  தகனம்.  செய்வாயாசரி என்றால்  நீ  செல்.அப்படியே  ஆகட்டும்.

வருஷங்கள் உருண்டது.  அந்த சந்நியாசி  ஸ்ரிங்கேரியில்  இருக்கும்போது அன்னையின்  அந்திம காலம்  வந்ததை உணர்ந்தார்.  திரிகாலமும் உணரும்  ஞானி அல்லவா அவர். கொடுத்த வாக்கு  நினைவுக்கு வந்தது. இறைவன் அருள் மிக்க  அந்த  ஞானி அடுத்த கணமே  அன்னையிருந்த ஊரில் இருந்தார்.அருகே  அமர்ந்தார். அவளை மடியில் இருத்திக்கொண்டார்.  அன்னையின் கண்கள் மட்டுமே  பேசின. கொஞ்சம் கொஞ்சமாக  உடல் ஒவ்வொன்றாக  சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. மரணம்  அவளை  முழுதுமாக  ஆட்கொண்டது. தாய்  வெறும்  உடலானதை உணர்ந்த  அந்த துறவிஅவளுக்கு  அந்திம கடன்களை  ஆசாரத்தோடு  சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும்  இடையேதுறவிக்கு எது உறவு? எள்ளி நகையாடினர் அறியாதோர்.

துறவியின் மனத்திலிருந்து, எண்ணக்குவியல்களிலிருந்து  வெடித்து  வாய் வழியே  கடல்  மடையென  ஐந்து  ஸ்லோகங்கள் வெளியேறியது  அப்போது.  இது  அந்த ஞானியின்  மற்ற  காவியங்களிலிருந்து  சற்று  அப்பாற்பட்ட  ஒன்றே  ஒன்று. இதில்  உணர்ச்சி பொங்கும். உறவும் பாசமும்  தொக்கி நிற்கும்.  அதுவே  இன்றும் என்றும்  அழியாத  காவியமாக இருப்பதைப்  பார்ப்போமா? .

தாயைக் கடவுளாகவே  போற்றுவது  அறிந்த விஷயம்.  கடவுளையும்  தாயாகவே நெருங்கு வதும்  தெரிந்ததே.  உலகியலில்  ஒரு  தாய்க்கு  மகனாகப்  பணி புரியவில்லையே  என்ற  ஏக்கம்  எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது.    முக்கியமாகஅவள் இருக்கும்போது. மனச்சாட்சியின்  உறுத்தல் படிக்கும்போது  நமக்கும்  உள்ளே உறுத்துகிறதே. நெருடுகிறதே.

Aasthaam  tavaddeyam prasoothi samaye durvara soola vyadha,
Nairuchyam thanu soshanam malamayee sayya cha samvatsaree,
Ekasyapi na garbha bara bharana klesasya yasya kshmo dhathum,
Nishkruthi  munnathopi thanaya tasya janyai nama.

ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

என்  அம்மா! என்  தலை  உன்னிலிருந்து வெளிப்படும் போது  என்னமாக  பல்லைக்கடித்துக்கொண்டு  தாங்க முடியாத  பிரசவ  வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில்  வெளியே  தள்ளினாய் , வருஷக் கணக்காய்  உன்  அருகே  படுத்து  உன் ஆடையை, படுக்கையை  தாராளமாக  நனைத்தேனே.  ஒரு  வார்த்தை கோவித்ததில்லையே .மாறாக  சிரித்து  என்னை  அணைத்தாய்.என்னால்  உன்  உடல்  இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது.  ஒரு பத்து மாச  காலம்  என்னமாய்  நான்  உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு   செய்வேன்.உலகம் என்னை புகழ்வதால் அது ஈடாகுமா?

Gurukulamupasruthya swapnakaale thu drushtwa,
Yathi samuchitha  vesham  praarudho maam twamuchai
Gurukulamadha  sarva prarudathe samaksham
Sapadhi  charanayosthe mathurasthu pranaama.

குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

என்  அம்ம்மா!!   திடீரென்று   ஒருநாள்  நான்  காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய்.  அது  எவ்வாறு  உன்னை உலுக்கியது. கண்ணீர்  கங்கையாய்  பெருக  என் குருகுல வாச ஆசான் வீட்டுக்கு  ஓடிவந்தாய். என்னைத் தேடினாய்என்  ஆடையைக் கவனித்தாய். என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல்  பாதம் வரை தடவிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என்  ஆசானும் கூட உன்னோடு   அழுதது இப்போது நடந்தது போல்  இருக்கிறதே.   நான்  என்ன செய்யமுடியும்.  பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக  வணங்குகிறேன்.

Ambethi Thathethi Shivethi tasmin,
Prasoothikale yadavocha uchai,
Krishnethi Govinda hare Mukunde tyaho,
Janye rachito ayamanjali.

.
அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

ஒ !  என்  அம்ம்மா !   உனக்கு  வலியெடுத்த போது  நீ  என்ன  கத்தினாய் ஞாபகமிருக்கிறதா?  ''  அப்பாஅம்மா !  தேவா  சிவாதெய்வமே  கிருஷ்ணாதேவதேவாகோவிந்தாஸ்ரீ  ஹரிபகவானேமுகுந்தா ''  நான்  என்ன செய்யப் போகிறேன்  தெரியுமா இப்போது இதற்கு  ஈடாகஎன்  அன்புள்ள  அம்மா,பணிவோடு உன் காலில்  விழப்போகிறேன்.

Na dattam mathasthe marana samaye  thoyamapi vaa,
Swadhaa vaa no dheyaa maranadivase sraadha vidhina
Na japtho mathasthe marana samaye  tharaka manu,
Akale samprapthe  mayi kuru dhayaam matharathulaam.

.
ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

என்  தாயேஉனக்கு  நான்  என்னவெல்லாம்  செய்யவில்லை  தெரியுமா?   தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட  தரவில்லை. உன் கடைசி  யாத்திரைக்கு  உபகாரமாக ஒரு விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை  என்று  ஒன்று இருந்ததா  எனக்குபோனதெல்லாம் போகட்டும்  உனக்கு நினைவு அழியுமுன்னே  அந்த  அந்திம நேரத்தில் உன்  காதில்'' ஒ ராமாஸ்ரீ  ராமா --  ஏதாவது  ஒரு  வார்த்தையாவது  சொல்ல  நான்  இருந்தேனா? ஈடற்ற, இணை கூறமுடியாத  தாயே, இரக்கமற்ற  என் மேல்  கொஞ்சூண்டு இரக்கம் வை. என் தவற்றை யெல்லாம்  மறந்து  மன்னித்து விடு.  ஏதோ  கடைசி   கடைசியாகவாவது
உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததை செய்தேனே.அதற்காகவாவது கருணை காட்டு..

Mukthaa Manisthvam, Nayanam mamethi,
Rajethi jeevethi chiram sthutha thwam,
Ithyuktha vathya vaachi mathaa,
Dadamyaham thandulamesh shulkam.


முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II


அம்மாநீ  நீடூழி  வாழ்க.  '' என்  முத்தேஎன்  நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டிஎன் உயிரின் உயிரே,'' என்றெல்லாம்  இட்டுக்கட்டி நீயாக  ராகம் போட்டு  என்னை  தூக்கி கொஞ்சி  பாடுவாயேநான்  என்ன செய்கிறேன் இப்போது அதற்கு நன்றிக்கடனாக  தெரிகிறது.  அன்பின் ஈரத்தோடு, பாசத்தின்  பனித்துளியோடுகருணையின் குளிர்ச்சியோடு நீ  பாடிய அந்த வாய்க்கு  ஈரமில்லாமல்  வறண்ட  உலர்ந்த   அரிசியைத்தான் கொஞ்சம் வாய்க்கரிசியாக  போடுகிறேன்.

அந்த  ஞானி, முற்றும்  துறந்த  துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, ஆதிசங்கரர்.  இந்த  ஐந்து ஸ்லோகமும்  அவர்  தாய்   ஆர்யாம்பவுக்கு கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற  காலடியில்  வந்து  அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது  பாடிய ''   மாத்ரு பஞ்சக  ஸ்லோகங்கள்''



-Arrowsankar

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms