பாக் நீரிணையில் (Palk
Strait) இந்தியாவின்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெரு நிலப் பரப்பையும் இராமேசுவரத்தையும்
இணைக்கும் ஒரு கொடுங்கைப் ( Cantilever Bridge) பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில் பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் (RAILWAY BRIDGE) இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.
இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
![]() |
கப்பல் கடக்கும்போது பாலம் திறக்கப்படும் காட்சி |
![]() |
ரெயில் பாலத்தில் கடக்கும் காட்சி |
பாலம் கட்ட தேவையான 18,000
டன் சல்லிகல் 270
கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது. இதனை கட்ட சிமென்ட் 5000 டன், இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தத. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10
கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப் பட விருக்கிறது.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
4 கருத்துரைகள்:
Pala naal asai yenakul irukiradhu angu sendru vara vendrum yendru.. :)
சில நாட்களுக்கு முன் கப்பல் இடித்து பாலம் சிறிது சேதமடந்து பின் சரிசெய்யப்பட்டது என்று படித்த நினைவு.
நேரில் பார்த்து பிரமித்திருக்கின்றேன்.
செய்திகள் அருமை நன்றி ஐயா
நன்றாக இருக்கிறது
Post a Comment