
சில நாட்ககளுக்கு முன் எனது நண்பர் திரு.ராஜவேல்
மூலமாக ஆசாரக்கோவை எனும் புத்தகம் கிடைத்தது.
நான் அவரிடம் சின்னவயசில் பள்ளி பாடங்களில் படித்ததை இப்போ எதற்கு என்று கேட்டேன்.
நானும் படித்து விட்டேன்.என்னிடம் சும்மாவே கிடக்குது நீங்க தமிழ் புத்தகங்கள
சேத்து(சேர்த்து) வைக்கீறிங்க.அதனாலே உங்களுக்கு தேவ்ப்படுமேன்னு கொடுத்தேன்’’ என்றார். உண்மைதான் நான் என் வீட்டில் தமிழ் மற்றும்
ஆங்கில புத்தகங்களை சேர்த்து வைத்து உள்ளேன்.அதில் இந்த கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய “ஆசாரக்கோவை” புத்தகமும் இப்போது வந்து
சேர்ந்தது.
ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது
கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ
பொருள் கூறலாம். மற்றும் ஒழுக்கங்களின் வரிசை என்றும் பொருள்
கொள்ளலாம்.
ஆசாரம் என்பது ஆச்சாரம் என்றவாறே
உச்சரிக்கப் படுகிறது. தமிழில்...