
சிறுவயதில் திருவான்மியூரில் கலாஷேத்ராவின்
தென்னைதமரத் தோட்டம் உள்ளது. அதில் விடுமுறை நாட்களில் நான் எனது நண்பர்களுடன்
விளையாடி பொழுது கழிப்பது வழக்கம். அதேபோல் அன்றும் எனது நண்பர்களுடன் கிரிக்கெட்
விளையாடிக் கொண்டிருந்த போது பேட்டிங் செய்த பையன் பந்தை ஓங்கி விளாச பந்து
கொஞ்சம் தூரத்தில் சென்று செடிகள் நிறைந்த
அடர்ந்த பொந்தில் விழ அதை நண்பன் ராஜன் தேடப் போக சற்று நேரத்தில் அவனது அலறல்
கேட்க அனைவரும் அவனை நோக்கி சென்றோம். அவன் வலது காலை பிடித்துக் கொண்டு வலியால்
துடித்தான். அப்பொழுது தான் நாங்கள் அவனை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால்
உடனே என்ன செய்யவேண்டும் என்பதை விட பாம்பின் அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும்
ஸ்தம்பித்து போனோம்.
சற்று தூரத்தில் இருந்து திரு கிருஷ்ணய்யர்
எங்களை நோக்கி வந்தார். வந்தவர் பாம்பு கடித்து இருப்பதும்...