வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, May 27, 2015

மனிதாபிமானத்தின் முன்

சிறுவயதில் திருவான்மியூரில் கலாஷேத்ராவின் தென்னைதமரத் தோட்டம் உள்ளது. அதில் விடுமுறை நாட்களில் நான் எனது நண்பர்களுடன் விளையாடி பொழுது கழிப்பது வழக்கம். அதேபோல் அன்றும் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பேட்டிங் செய்த பையன் பந்தை ஓங்கி விளாச பந்து கொஞ்சம் தூரத்தில் சென்று  செடிகள் நிறைந்த அடர்ந்த பொந்தில் விழ அதை நண்பன் ராஜன் தேடப் போக சற்று நேரத்தில் அவனது அலறல் கேட்க அனைவரும் அவனை நோக்கி சென்றோம். அவன் வலது காலை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தான். அப்பொழுது தான் நாங்கள் அவனை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால் உடனே என்ன செய்யவேண்டும் என்பதை விட பாம்பின் அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனோம். சற்று தூரத்தில் இருந்து திரு கிருஷ்ணய்யர் எங்களை நோக்கி வந்தார். வந்தவர் பாம்பு கடித்து இருப்பதும்...

Thursday, May 14, 2015

பத்தாவது ரத்தினம்

ஒற்றுமையாய் இருந்த ஒன்பது ரத்தினங்களுக்குள் ஒருநாள் “நம்மில் யார் பெரியவன்?” என்ற சண்டை வந்தது.   GEMS “நானே பெரியவன்” என்றது வைரம். “இல்லை நானே பெரியவன்” என்றது வைடூரியம் “அட கடவுளே! இந்த சண்டையை தீர்த்து வைக்க ஒரு வழியும் இல்லையா? என்றது கோமேதகம். “இருக்கிறது” என்றது மரகதம். “என்ன?” என்றது நீலம் “நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம்,அந்த போட்டியில் எவன் வெற்றியடைகிறானோ அவனே பெரியவன் என்று நாம் ஒப்புக்கொள்வோம்!” என்றது மரகதம். “என்ன போட்டி அது?” என்று எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து கேட்டது வைரம். “பேராசை பிடித்த மனிதனை,நம்மில் எவன் போதும்! போதும்! என்று சொல்ல வைக்கிறானோ, அவனே நமக்கெல்லாம் பெரியவன் .என்ன சொல்கிறீர்கள், நீங்கள்?”என்று கேட்டுவிட்டு எல்லாவற்றையும் சேர்ந்தாற்போல் ஒரு பார்வை பார்த்து...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms