வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, July 31, 2015

மந்திரம்

மாலை நேரத்தில் கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு படித்துறையில் தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் யோகேசன். தனது மேலாடையை ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம் செய்ய ஆயுத்தமானான் யோகேசன்.  தனது மேல் அங்கியின் உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத்துவங்கினான். கங்கையின் ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை. சில மணித்துளிகள் கடந்தது.... “இறைவனே!, என்னை ஆளும் ஈசனே! உன்னருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்...” என கர்ண கொடூரமான குரல்வளத்தில் ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் யோகேசன். தன்னைவிட முற்றிலும் எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில் ...

Tuesday, July 28, 2015

அக்னி தீர்த்தக் கரையினிலே

அக்னி தீர்த்தக் கரையின் கடைக்குட்டி. பாரதத்தின் ஏவுகணை நாயகன். இளைஞனை ஊக்குவித்த ஜீவரத்தினம். உன் அருமைக் கண்டே பதவிகள் தந்தோம் கடவுள் உன் பெருமை கண்டே சிவலோக பதவி தந்தான் நீங்கள் இங்கு புதைக்கப்படவில்லை விண்ணில் விதைக்கபட்டுள்ளீர். மீண்டும் வருவீர்கள் எங்களிடம் எங்கள் கண்ணீர் துடைக்க! திரு.APJ.அப்துல் கலாம் அவர்கள் மறைவையொட்டி நான் எழுதிய அஞ்சலி கவிதை. திரு.APJ.அப்துல் கலாம் அவர்களது ஆன்மா சாந்தியடைய வான்மீகீ பிரார்த்தனை மன்ற சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் - Arrow Sankar பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் புஷ்பாஞ்சலி பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆனால் அந்த ஆபரணத்தில் இருந்து தோன்றும் ஒளி நம்மை உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவை ‘அறிவு சார் சூப்பர் பவர்’ ஆக்கவேண்டும் என்ற...

Monday, July 13, 2015

யார் இந்த அபஸ்வரம்?

வெண் பஞ்சு மேகங்கள் யானை முதுகு மலைகள் பரதம் ஆடும் நீர் வீழ்ச்சிகள் கனிகள் பழுத்த மரங்கள். பச்சையுடை புல்வெளிகள் பாம்பாய் நெளியும் கொடிகள் பகல் நிலவாய் சூரியன் பளீர் ஒளியாய் வெளிச்சம். ஆஹா! ஆஹா! என்ன அற்புதம் ஆண்டவனின் அருமை சிற்பம் ஆருயிராய் மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை பிறக்கவேண்டும். வானம்பாடி பறவை வாழ்த்துரையில், வாசம்கொண்ட முல்லை வளைந்தது. வாலிபதாமரை தடாகத்தில் தவழ்ந்தது. வாசலில்லாத வானம் வெட்கப்பட்டது. மயிலும் வானம்பாடியோடு கூட்டானது. மதன மோகத்துடன் நாட்டியமாடியது. மழை வரப்போகுதென்று மத்தளமிட்டது. மண்ணும் புல்லும்  கொஞ்சியது. மடையர்கள் மண்டையில் களிமண்ணா? மந்தபுத்தியில் மட கவிதையா? மந்திகளாடும் கோணங்கி ஆட்டமா? மனமென்ன புள்ளியில்லா கோலாமா? யானை மல்லாந்தா படுக்கும்? அருவி...

Tuesday, July 7, 2015

கருணையே வடிவானவள் - காட்சியருளுபவள்

உலகத்தின் அன்னை கருணையே வடிவானவள். லலிதா சகஸ்ரநாமம் அன்னையை இருமுறை  மாத்ரே நம:  எனத் துதிக்கின்றது. இது கூறியது கூறல் அன்று. முதலில் பொதுவாகத் துதித்தது. இரண்டாவதாகக் கூறியது, எவ்வுயிர்க்கும் எப்பிறப்பிலும் அவளே அன்னை என்றதால் துதித்தது. அன்பும் கருணையும் மிக்க அன்னை அழகும் இளமையும் ததும்பும் காமாட்சி, இராஜராஜேசுவரி, மீனாட்சி முதலிய வடிவில் உயிர்களுக்கு அருள் செய்கின்றாள். வீரம்,சக்தி வடிவத்தை ஜ்வாலாமுகி, சண்டி முதலிய கோரவடிவில் உயிர்களுக்கு வரும் நலிவுகளை ஒழிக்கின்றாள். பிரபஞ்சத்தைப் புரட்டிப் போட்டுப் புதிதாகப் படைக்கும் அவளுடைய அவதாரம், காளி என்ற வடிவில் புறத்தே கோரமாயினும் அகத்தே கருணையும் அன்பும் நிறைந்ததாகும். அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று “பண்டாஸூர வதோத்யுக்த சக்திசேனா ஸமன்விதா” (65) என்பதாம். இதற்குப் பண்டாசுரனை...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms