வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, November 30, 2016

174 வயது பாலம்!

இரட்டை நகரங்களான நெல்லையையும், பாளையங்கோட்டையும் பிரித்து இடையில் ஓடுகிறது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணியில், முன்பு ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பரிசல் மூலமாகவே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை. பரிசல் பயணத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியானவர்கள் மட்டுமே பத்திரமாக ஆற்றைக் கடக்க முடியும். மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிக்கடி உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன. நெல்லை டவுனில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டதால், படகுத்துறை மூலமாகவே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்....

Wednesday, November 23, 2016

சத்தமின்றி

சத்தமின்றி கத்தைக்கத்தையாய் பெட்டியில் வைத்து பூட்டீனீர் கணக்கில் வரவு வைக்காமல் கையிருப்பில் அடுக்கி கொண்டீர். புதிதாய் கருப்பு என்று பெயர் சூட்டி வைத்தீர். அச்சடித்த காகிதக்குப்பை ஒழிவதற்குள் சில்லறையாய் மாற்ற வழிவகுத்தீர். வங்கியில் வரிசையாய் நின்றும் மேலாளரை கவனித்தும் கைமாற்றினீர். தங்கம் வாங்கி வைத்தும் பங்கம் வராமல் பதுக்கினீர். நூறாய் வைத்துக் கொண்டவனை ஆளாய் பார்த்து நட்பாக்கினீர். வேலைக்காரன் வீட்டுப்பானையை தற்காலிக கருவூலப் பெட்டியாய் மாற்றினீர். நிம்மதி தராது என்று ஏழை ஒருபோதும் சொன்னதில்லை. நிம்மதி தராத என்னை பணக்காரன் இழக்க தயாரில்லை...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms