சத்தமின்றி
கத்தைக்கத்தையாய்
பெட்டியில் வைத்து பூட்டீனீர்
கணக்கில்
வரவு வைக்காமல்
கையிருப்பில் அடுக்கி கொண்டீர்.
புதிதாய்
கருப்பு என்று
பெயர் சூட்டி வைத்தீர்.
அச்சடித்த
காகிதக்குப்பை ஒழிவதற்குள்
சில்லறையாய் மாற்ற வழிவகுத்தீர்.
வங்கியில்
வரிசையாய் நின்றும்
மேலாளரை கவனித்தும் கைமாற்றினீர்.
தங்கம்
வாங்கி வைத்தும்
பங்கம் வராமல் பதுக்கினீர்.
நூறாய்
வைத்துக் கொண்டவனை
ஆளாய் பார்த்து நட்பாக்கினீர்.
வேலைக்காரன்
வீட்டுப்பானையை தற்காலிக
கருவூலப் பெட்டியாய் மாற்றினீர்.
நிம்மதி
தராது என்று
ஏழை ஒருபோதும் சொன்னதில்லை.
நிம்மதி
தராத என்னை

2 கருத்துரைகள்:
சிக்கலான பிரச்சனை தான்
https://kovaikkavi.wordpress.com/
தற்போதைய சூழலுக்கு பொருத்தமான கவிதை
Post a Comment