Tuesday, February 21, 2017

மஹாசிவராத்திரி 2017

மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு.

நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.

அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே நம் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். இந்நாள், இதே காரணத்திற்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மஹாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ஷிவாஎன்றால் எது இல்லையோ, அது’. உங்களில் நான்என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நாம் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.

இதை நோக்கியே மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் அமைகின்றன. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு.

வெறும் கண்விழித்திருக்கும் ஒரு நாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நாம் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். ஷிவாஎனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நாம் எல்லோரும் உணர்வோம்!

சிவராத்திரியில் சொல்லவேண்டிய சுலோகம்
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
கயா ப்ரயாகேத் வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்.
-பில்வாஷ்டகம்

பொருள்:
மூன்று இதழ்களைக் கொண்டது வில்வ இலை. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிக்கும். இறைவனின் மூன்று கண்களையும் நினைவுபடுத்துகின்றன. பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று பருவங்களை அளிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். பரமேஸ்வரா, இந்த வில்வத்தை நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன். காசி என்ற புனிதத்தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரைத் தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ, அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன். உமக்கு நமஸ்காரம்.
(மகாசிவராத்திரியன்று இத்துதியை ஜெபித்துக் கொண்டே வில்வ தளங்களால் சிவபெருமானுக்குப் பூஜை செய்தால் அளவற்ற புண்ணியம் கிட்டும்.)

நன்றி : ஈஷா யோகா மையம்
 Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates


நல்ல கட்டுரை.
தகவல்களிற்கு மிகுந்த நன்றி-
இனிய வாழ்த்துகள்

Chitra said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Very nice information sir

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms