வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, July 21, 2017

ஆடிமாதமும் தமிழரும்

மழை தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் சிலிர்க்கின்றன. சோம்பிக் கிடக்கும் ஆறுகள் புத்துணர்ச்சி கொள்கின்றன. புது வெள்ளம் பாய்கிறது. எங்கும் உற்சாகம் பொங்குகிறது. ஆடி பிறந்துவிட்டது. விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு. ஆடி, பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிச் சமவெளிப் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத்...

Friday, July 7, 2017

வியாச மகரிஷியின் பிறந்தநாள் -குரு பூர்ணிமா

வியாச மகரிஷியின் பிறந்தநாள் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி ஆஷாட பௌர்ணமி எனப்படும். தமிழில் ஆனி பௌர்ணமி. சக்தி உபாசகர்களுக்கும் ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கும் பௌர்ணமி தினம் ஒரு விசேஷ தினம். அன்று நவாவரண பூஜை, லலிதா சகஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்ரம், முத்து சுவாமி தீட்சிதரின்  கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் என்று பாடி மகிழ்வர். கன்யகா பூஜை, சுவாசினி பூஜை செய்து மகிழ்வர். அன்றைய தினம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வியாச மகரிஷியின் பிறந்தநாள் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. அதனால் எல்லா மடங்களிலும், குரு நிலையங்களிலும் வியாசர் முதலான முந்தைய குருமார்களை நினைத்து வணங்குவார்கள். சீடர்கள், பக்தர்கள் தங்கள் குருவைப் பணிந்து குருவிடம் மந்திர உபதேசம் பெற்று மகிழ்வர். அவரவர் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களையே ரகசியமாக காதில் உபதேசிப்பர். இத்தகைய மந்திரங்களை...

மனித வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள்

மனித வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம் 5. ப்ரணகால தோஷம் எனப்படும். 1. வஞ்சித தோஷம் : பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும். 2. பந்த தோஷம்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms