Thursday, February 15, 2018

ஞானம் இதோ

ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.


நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?”

குரு புன்னகைத்தார்.

பண்டிதர் விடவில்லை.

எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.

சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.

அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.

என்ன ஆயிற்று?”

நீங்கள் சொன்னதுபோல மழையில் நேற்று மாலை நின்றேன்.

ம்?”

முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!

பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!


 Print Friendly and PDF

3 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நச்சென்று உணர்த்திய விதம் அருமை.

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஞானத்திற்கு நன்றி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms