
ஒரு ஊரிலே ஒருவன் பல பாவங்கள் செய்து கொண்டு
வந்தான். அவனுடைய குரு " இப்படி பாவங்களைச் செய்து ஏன் கெட்டுப் போகிறாய்? இனி
அப்படிச் செய்யாதே..." என்று பல புத்திகளை அடிக்கடி அவனுக்குச் சொல்லி வந்தார்.
அவன் "எல்லாப் பாவங்களையும் என்னால்
விட முடியாது.உம்முடைய சொல்லுக்காக நீங்கள் விடச் சொல்லும் பாவம் ஒன்றை மட்டும் விட்டு
விடுகிறேன் என்றான்.
குருவும் " இனி பொய் சொல்லும் ஒரு
பாவத்தையாவது விட்டு விடு. உண்மை மட்டும் பேசு " என்று கட்டளையிட்டார்.
அதற்கு உடன்பட்ட சீடன் ஒருநாள் இரவு அந்த
ஊரில் அரசனுடைய அரண்மனையில் திருடுவதற்காகப் போய் பதுங்கியிருந்தான்.
அப்போது நகர சோதனைக்காக மாறுவேடம் போட்டுப்
புறப்பட்ட அரசன் அவனைப் பார்த்து விட்டான்.
அவனைப் பார்த்து " இந்த அரண்மனைக்கு
ஏன் வந்தாய்? உண்மையைச் சொல் " என்று கேட்டான்.
திருட வந்த அவனும் அவனுடைய...