Sunday, July 21, 2013

விதையும்,கனியும்


ஏப்ரல் 8, 1928ல் அப்போதைய தஞ்சை மாவட்டம், இப்போதைய நாகை மாவட்டம் விளநகர் கிராமத்தில் பிறந்த எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் பிற்காலத்தில் பேனா முனையால் இலட்சக்கணக் கான உள்ளங்களை உலுக்கியெடுத்து, எழுச்சி யடையச் செய்யப்போகிறார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. கடந்த ஜனவரி 21 அன்று இவ்வுலகிலிருந்து பிரிந்த அவரின் உன்னத வாழக்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன.


மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப்பட்டம். பிறகு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றுமொரு முதுநிலைப் பட்டம். அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் மருத்துவ ரசாயணத்தில் டாக்டர் பட்டம். எனத் தொடர்ந்த படிப்பு 85 வயதில் அவரின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது.
வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோர் ஒவ்வொருவரும் தாரக மந்திரமாய் கொள்ள வேண்டிய கேள்வி இது என்றால மிகையில்லை.
சொன்னபடி வாழ்ந்தவர்: சுயவளர்ச்சி, சுய பொருளாதார வளர்ச்சி, சமூக ஈடுபாடு. முதலில் உன்னை ( கல்வியை, சிந்தனையை) உயர்த்திக் கொள்; உன் தேவைக்கான, உன் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத் தன்னிறைவு கொள்; நானுண்டு குடும்பமுண்டு என்றில்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, உன்னால் முடிந்த அளவு பணி செய் என்ற வாழ்க்கையின் படி நிலைகளை இயக்கத் தின் கொள்கைகளாக வைத்தவர், அடிபிசகாமல் தன் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டினார் உயர்கல்வி கற்றவராக தன்னை உயர்த்திக் கொண்டு, அமெரிக்க பல்கலைகழகங்களில் பேராசிரியராக துறைத்தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். பிறகு, ஒரு உணவுத் தொழற்சாலையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். பின்னர், தானே ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, அமெரிக்காவில் தொழில் துறையில் உள்ளவர்கள் யார், யார் என்ற பட்டியலில் இடம் பெற்றார். மாணவன், கல்லூரிப் பேராசிரியர், துறைத் தலைவர், தொழிற்சாலையில் தலைமை நிர்வாகி, சொந்தத் தொழிற்சாலை நிறுவுதல் என்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வாழ்ந்து, தன்னையும் தன் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொண்ட அவர் அடுத்த 25 ஆண்டுகள் ( 1988 முதல்) உழைத்தது தாயகத்திற்காக, தமிழகத்திற்காக. சொன்னபடி வாழ்ந்த பெருமைக்குரிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உதயமூர்த்தி.

அமெரிக்காவில் இருந்த காலகட்டத்திலேயே தன் எழுத்துப் பணியைத் தொடங்கிவிட்டார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகள் அமெரிக்கா வந்தபோது, அவர்களுடன் பயணித்து, பயணவிவரங்கள் குறித்து தமிழகத்திற்கு எழுதினார். 1970-80களில் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் இலட்சக்கணக்கான உள்ளங்களில் எழுச்சி தீபம் ஏற்றின. மனித உறவுகள், சிந்தனை, தொழில் செல்வம், நீதான் தம்பி முதலமைச்சர், உயர்மனிதனை உருவாக்கும் குணங்கள், ஆத்ம தரிசனம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். இருந்தாலும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று இன்றுவரை பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் புத்தகம் எண்ணங்கள்மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களே நம் வாழ்க்கை எனும் மரமாக மாறுகிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எளிய வார்த்தை களில், வரிகளில் விளக்கியிருப்பார் அப்புத்தகத்தில், சில ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகம் அப்புத்தகத்தை மாணவர்களுக்குப் பாட நூலாக வைத்திருந்தது என்றால் அப்புத்தகத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அவர் நூல்களை தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம், சமூகச் சிந்தனைகள், ஆன்மீகம் என்ற 4 வகை களாகப் பிரிக்கலாம். என்னைச் செதுக்கிய எண்ணங்கள்  என்ற நூலின் மூலம் தன் சுயசரிதையை எழுதியுள்ளார். (இவர் எழுதிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது)

1988ஆம் ஆண்டில் மக்கள் சக்தி இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
கல்லூரிப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள் வரை அனைவரையும் வாசகர் களாகக் கொண்டவர் உதயமூர்த்தி.
தன் எண்ணங்களுக்கு குருவாக இருந்தவர் ஜேம்ஸ் ஆலன் என்பார் அவர். ஆலனின் புகழ் பெற்ற நூலின் தமிழாக்கமாக ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் இறந்தாலும், அவரின் எழுத்துகள் மூலம் இன்றும் என்றும் அவர் நம்மோடு வாழ்வார்.
அவர் விட்டு சென்ற பணியினை அதாவது அவர் வைத்த மரக்கன்று இன்றும் தன்னால் முடிந்த அளவுக்கு கனியினையும் நிழலையும் இளைப்பாறுதலையும்  போற்றுபவர் களுக்கும் தூற்றுபவர்களுக்கும் பாரபட்சமின்றி தந்துக் கொண்டிருக்கிறதுஇன்னும் தரும்.

கடந்த ஜூன் மாதம் 2ந் தேதி,2013 அன்று சென்னை,அடையார், இந்திராநகரில் உள்ள யூத் ஆஸ்டலில் நடந்த கூட்டவிழாவே இதன் அடையாளமாக இருந்தது. 

அவ்விழாவில் நடந்த போது பங்கேற்ற மற்றும் செயல்வீரர்களின் புகைப்படத் தொகுப்பு இது .












5 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உண்மை... உண்மை... எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் நூல்கள் நமக்கு ஒரு பாடம்... புகைப்படங்கள் அருமை... சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எக்ஸ்பிரஸ் வேக கமெண்ட்க்கு மிக்க நன்றி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக அருமை உங்கள் தொகுப்பு

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வழிக்காட்டி மனிதர்கள் மரிப்பதில்லை .திரு உதயமூர்த்தி அவர்களும் அப்படித்தான்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முன்னோரே முன்னுரை ஆவர் .முன்னுரை மனிதரே முழு புத்தகத்தின் முகவரி ஆவார் .நம் தமிழ் சமுதாயத்தின் மனசாட்சி மனிதராய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.உங்கள் கட்டுரை நன்று .தொகுப்பும் எழுத்தும் நன்று.--->>>>

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms