நவராத்திரியை பற்றி முன்னமே 2012-ல் எழுதிய பதிவைப் படிக்க நவராத்திரி விரதம் இங்கு அழுத்தவும்.
தமிழ் கலாச்சாரங்களில் சக்தி கடவுளை இயற்கையுடன் இணைத்து இயற்கை தரும் உணவு (தானியங்கள்,பழங்கள்), மலர் , நீர் (ஆறு,குளம்,ஊற்று,கடல்), ஆகிய
-வைக் கொண்டு இயல்பாய் 9 நாட்கள் இரவு வேளையில் பூஜிப்பதே நவராத்திரியாக மற்ற மொழி, மாநில மக்கள் வழிப்படுகிறார்கள்.
நோக்கமும்,பக்தியும் ஒன்றாக இருப்பதால் தற்போது இந்து மக்கள் அனைவரும் நவராத்திரியை சிறப்பாக அவரவர் வழிமுறையில் கொண்டாடி வருகின்றனர்.
ஜோதிட சாஸ்திர முறையில் பாவகத்தின் அடிப்படையில் ஆறாமிடமான கன்னிராசி(தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம்) நோய் ஸ்தானமாக வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் எல்லோரும் நவதானியங்களை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை பெற வேண்டி அதாவது புரட்டாசி மாதத்தில் முதல் நாளில் இருந்தே அசைவ மற்றும் கடின உணவு வகைகளை தவிர்த்தும், அமாவாசை மறுநாள் முதல் நாளில் இருந்து ஆரம்பித்து 9 நாட்கள் வரை இரவு வேளையில் பக்திப்பாடல்களை பாடி நவதானிய உணவுகளை உண்டும் வளம் பெறுகின்றனர். விழாவின் கடைசி மூன்று நாட்கள் சக்தி கடவுள்களின் கலைமகள் மலைமகள் அலைமகள் என மூன்று தெய்வங்களை தனித்தனியே வழிப்பட்டும் பத்தாவது நாளான தசமியன்று மூவரையும் இணைத்து கலைக்கும்,தொழிலுக்கும், வளத்திற்க்கும் வழிபடுகின்றனர்.
இதற்காக நமது ரிஷிகள்,முன்னோர்கள்,ஆன்மீக அடியார்கள் எழுதிய பல மந்திரங்கள்,துதிகள்,பாடல்கள் வழிவழியாய் சொல்லப்பட்ட நைவேத்யங்கள், பூஜை முறைகள் என பின்பற்றப் பட்டு வருகிறது.தமிழர் மரபில் அவை:-
1ம் நாள்: கோதுமை இனிப்பும்,சுண்டலும் உயிர்களை படைக்கும் காக்கும் தாயாக போற்றி பாடப்படுகிறது.
2ம் நாள்: பால் பாயாசம், உலர்ந்த பழவகைகளும் சுண்டலும் உயிர்களை போஷிக்கும்(மனதை ஒருநிலை படுத்தும் முறையாக) தாயாக போற்றி பாடப்படுகிறது.
3ம் நாள்: கேசரி,ஜாங்கிரி என சிவப்பு நிற இனிப்பும்,சுண்டலும்,துவரையில் செய்த காரமும் பாசநிலை போதிக்கும் தாயாக போற்றி பாடப்படுகிறது.
4ம் நாள்: பாதாம்,முந்திரி இனிப்பும்,பச்சைபயிறு சுண்டலும் செய்து அறிவுநிலை போதிக்கும் குருவாக போற்றி பாடப்படுகிறது.
5ம் நாள்: லட்டு இனிப்பும், சுண்டலும் செய்து ஞானநிலை போதிக்கும் குருவாக போற்றி பாடப்படுகிறது.
6ம் நாள்: பலவகை இனிப்பும், சுண்டலும் செய்து செல்வநிலை வருஷிக்கும் ஆசைமனநிலையினை கட்டுப்படுத்தி உண்மை செல்வநிலையாய் போற்றி பாடப்படுகிறது.
7ம் நாள்: வெல்லத்தினால் செய்த இனிப்பும், கருப்புசுண்டலும் செய்து உறுதியான உடல்நிலை போதிக்கும் வலிமையான தாயாக போற்றி பாடப்படுகிறது.
8ம் நாள்: பலவகையான இனிப்பும், சுண்டலும் செய்து உத்வேக உடல்நிலையும் எதிரியினை எதிர்க்கும் வீரத்தாயாக போற்றி பாடப்படுகிறது.
9ம் நாள்: பலவகையான இனிப்பும், சுண்டலும் செய்து எல்லாரும் சமமாக போற்றி தொழில்,கலைகள்,வாய்ப்புகள் பெருக ஆத்ம மனநிலை தாயாக போற்றி பாடப்படுகிறது.
10ம் நாள்: பலவகையான இனிப்பும், சுண்டலும்,பொரிக்கடலையும் படைத்து வெற்றிவாய்ப்புகள் எல்லா நிலையிலும் பெருக வளமும் வெற்றியும் அளிக்க மூவுலக தாயாக போற்றி பாடப்படுகிறது.
இந்த நாட்களில் படிக்க வேண்டிய மந்திரங்கள்:
- ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி
- பொன்மழை பொழிய வைத்த
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்
- சகல கலைகளிலும் சிறக்க வைக்கும்
சகலகலாவல்லி மாலை
- ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்
- ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம்
- ஸ்ரீ சக்கரம்
8 கருத்துரைகள்:
நவராத்திரி. அருமை நன்றி
அருமை...
நன்றி ஐயா...
Thank you shankar sir
இந்த விளக்கங்கள் சோழ வரலாற்றில் உள்ளது. நன்றி
நன்றி அருமையான பதிவு
நவராத்திரி விழாவாகவும்,போர்க்கருவிகளை புதுப்பிக்கவும்,போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் நிகழ்ச்சியாகவும் தமிழ் வரலாற்றில் விளக்கப் பட்டுள்ளது.
விளக்கங்களும்,பூஜை முறைகளும் அருமை
நீங்கள் உங்கள் பிளாக்குக்காக நிறைய படிக்கீறீர்கள்.அதனை சரியான சமயத்தில் பதிவிடுகீறீர்கள். மகத்தான பணி. தொடரட்டும்
Post a Comment