சர்தார் பட்டேல் ரோட்டின் மையப் பகுதி
மத்ய கைலாஸ் கோவிலிருந்து ஆராம்பமாகும்
ரோட்டின் பழைய வடிவம் தான் பழைய மஹாபலிபுரம் சாலை .
2006-07-ல் ஐ.டி.எக்ஸ்பிரஸ் வே (IT EXPRESS WAY) என்று உருமாறி தமிழக முன்னாள்
முதல்வர் திரு கருணாநிதியால் 2007-ல் மீண்டும் ராஜீவ் காந்தி
சாலை என மாற்றப்பட்டு புதிதாய் சாலை
சீரமைக்கப்பட்டு வாகன வரி வசூலுடன் பொலிவுடன் இருக்கிறது
இன்று ஓ.எம்.ஆர் (O.M.R ) என்ற சுருக்கத்துடன் எல்லோருக்கும் தெரிந்த சாலையாக உள்ளது . டைடல் பார்க், இன்போசிஸ், விப்ரோ,அக்சன்சர்,ஹெசிஎல் மற்றும் பல மாபெரும் ஐ.டி நிறுவனங்களாலும், பல பொறியியல், மருத்துவ கல்லூரிகளாலும் வியாபித்து
மேலும் இந்த ஓ.எம்.ஆர் மக்களிடம் மிக பிரபலமாக உள்ளது . ஐ.டி நிறுவனங்கள், கல்லூரிகள் என்றதும் மக்களின் தேவைக்கு
ஏற்றார்ப்போல் குடியிருப்பு கட்டிடம், பள்ளி வளாகம், ஷாப்பிங் மால், மருத்துவமனை,திரையரங்குகள் என இந்த சாலை
விஸ்வரூபமானது . சுமார் கிட்டத்தட்ட 44
கிலோ
மீட்டர்களை ஆட்க் கொண்ட இந்த சாலை இப்பொழுது மிக
அதிகமான வாகனங்கள் சென்று வரும் சாலையாக மாறிவிட்டது. அதனால் கவனசிதறலும், வாகன
விபத்துக்களும்,உயிர்
இழப்புகளும் மிக அதிகமாகிவிட்டது.
1.பாத சாரிகளின் (walkers) ஒழுங்கீனம்
செல்போனில் பேசிக்கொண்டே நடைப்பாதையை
கடப்பது . சாலையை
கடக்கக்கூடாத இடத்தில் கடப்பது. சாலையின் மத்தியில்
உள்ள வேலிகளை எகிறித் தாண்டி குதிப்பது. இன்னும் பல
ஒழுங்கீனங்கள்
2.வாகன ஓட்டிகளின் (சைக்கிள்,மோட்டார் சைக்கிள்,கார் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள்) ஒழுங்கீனம்.
சைக்கிளில் செல்வோர்
தகுந்த டிராக்கில் செல்லாமல் சாலையை ஆக்கிரமிப்பது ,செல்போன்
ஆடியோ வீடியோ மற்றும் ரேடியோக்களை வாகனம் ஓட்டும் பொழுது கையாள்வது,அளவுக்கு மீறிய சரக்குகளை சுமந்து
செல்வது , எச்சரிக்கை சமிஞ்சைகளை உபயோகிக்காமல் இருப்பது, ஒழுக்கமற்ற செயல்களை
செய்வது (எச்சில் துப்புவது , புகைப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது),சரியாக பராமரிக்காத வாகனத்தை உபயோகிப்பது, ஓவர்டேக் செய்வது
மற்றும் போக்கு வரத்து விதி
முறைகளை மீறுவது.
3.போக்குவரத்து காவல் துறையினரின் கவனக்குறைவு.
எச்சரிக்கை,சமிஞ்சை,அறிவிப்புப்பலகை (NO
ENTRY,U TURN,HOSPITAL ZONE, SCHOOL ZONE), சுவரொட்டி, மின்னொளி பலகை தகுந்த இடத்தில்
வைக்காமல் இருப்பது ,விபத்து பகுதிகளை அறிவிக்காமல் இருப்பது.சாலை
பாதுக்காப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தாமல் இருப்பது. விபத்து
நடந்ததிற்க்கான உண்மையான காரணத்தினை அறியாமல் விசாரிக்காமல் இருப்பது.
4.அரசு பொது பணித் துறையினரின் அலட்சியம்.
சர்வீஸ் சாலை
மற்றும் சாலைகளின்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. அரசு வளாகங்கள் ,கடைகள் ,மதுக்கடைகள், இவற்றின் ஒழுக்க
மற்றும் சட்ட
விதி முறைகளை முறையாக பயன் படுத்துவது .
5.அரசு நெடுஞ்சாலை
துறையினரின்
அலட்சிய பணி மெத்தனம்.
சர்வீஸ் சாலை மற்றும் சாலைகளை
பராமரிப்பதில் மெத்தனம் . குறுக்கீடு,குழி,குப்பை அசுத்தம் ஆகியவைகளை அதற்குரிய
துறைகளே அகற்றும் சரி செய்யும் என நினைப்பது .
இந்த குறைப்பாடுகளை அகற்றினால், செயல்பாடுகளை செய்வித்தால், ஓ.எம்.ஆர் (O.M.R ) இனி புது சாலையாக மாறும். வெறும் பெயர் மாற்றம் மட்டுமே ஏற்றம் தராது