வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, January 22, 2015

கண்ணாடிப் பாடம்

கண்ணாடி - வெறும் கண்ணாடி அல்ல! அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.அடிக்கடி அதைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?  பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!  ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரியவரை நெருங்கினான். “ஐயா…!” “என்ன தம்பி?” “உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?” “ஆமாம்!” “அதில் என்ன தெரிகிறது?” “நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!” “அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?” “ஆமாம்!” “பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” பெரியவர் புன்னகைத்தார். “சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள்...

Sunday, January 11, 2015

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

"பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம். போகி பண்டிகை "போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும்...

வீரத்துறவி விவேகானந்தர்

‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதே ‘என்னால் இயலாது’ என்றும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லாத வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடுகையில், காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ. வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும் பெரும் மன உறுதியும் நீ கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி உடையவன். ‘சமுத்திரத்தையே குடித்து விடுவேன்; மலையையே உடைத்தெறிவேன்’ என்கிறான். அத்தகைய ஆற்றலை, மன உறுதியை நீ பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். உனது குறிக்கோள் உன்னை வந்தடையும். நம்பிக்கை இழக்காதே. கத்தி முனையில், கயிற்றில் நடப்பதைப்போல வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடைய நினைத்த உனது இலட்சியம், குறிக்கோளை நோக்கி...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms