Wednesday, November 23, 2016

சத்தமின்றி


சத்தமின்றி
கத்தைக்கத்தையாய்
பெட்டியில் வைத்து பூட்டீனீர்

கணக்கில்
வரவு வைக்காமல்
கையிருப்பில் அடுக்கி கொண்டீர்.

புதிதாய்
கருப்பு என்று
பெயர் சூட்டி வைத்தீர்.

அச்சடித்த
காகிதக்குப்பை ஒழிவதற்குள்
சில்லறையாய் மாற்ற வழிவகுத்தீர்.

வங்கியில்
வரிசையாய் நின்றும்
மேலாளரை கவனித்தும் கைமாற்றினீர்.

தங்கம்
வாங்கி வைத்தும்
பங்கம் வராமல் பதுக்கினீர்.

நூறாய்
வைத்துக் கொண்டவனை
ஆளாய் பார்த்து நட்பாக்கினீர்.

வேலைக்காரன்
வீட்டுப்பானையை தற்காலிக
கருவூலப் பெட்டியாய் மாற்றினீர்.

நிம்மதி
தராது என்று
ஏழை ஒருபோதும் சொன்னதில்லை.

நிம்மதி
தராத என்னை
பணக்காரன் இழக்க தயாரில்லை.
Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிக்கலான பிரச்சனை தான்
https://kovaikkavi.wordpress.com/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தற்போதைய சூழலுக்கு பொருத்தமான கவிதை

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms