புத்தகக்
கண்காட்சி 2017
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவையொட்டி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தகக்
கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 40வது புத்தக கண்காட்சி 06.01.2017 முதல் 19.01.2017ம் தேதி வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்
மேனிலைப் பள்ளியில் இந்த கண்காட்சி நடக்கிறது.
தமிழ்
மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ள இந்தப்
புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள்
இடம் பெற்றுள்ளன. அவற்றில் 350 தமிழ்
புத்தக பதிப்பகங்களும்,
153 ஆங்கிலப் புத்தக
பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. 10 லட்சம்
புதிய தலைப்புகள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்குள்
நுழைவு கட்டணமாக ரூ.10
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக
50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள்
வழங்கப்படுகின்றன. 50
ரூபாய் சீசன்
டிக்கெட் பெறும் வாசகர்கள் கண்காட்சி முடியும் வரை தினமும் வந்து செல்லலாம். 100 ரூபாய் சீசன் டிக்கெட் பெறுவோர் 4 பேர் கொண்ட குழுவாக தினமும் வரலாம்.
இந்தக்
கண்காட்சியை கல்வி அமைச்சர் மா.பா பாண்டியராஜன் 06.01.2017 அன்று மாலை 6 மணிக்கு
தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக
நூலகங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புத்தகக்
கண்காட்சி வெறும் பார்வைக்காக அல்ல,வாங்கி படிக்கவும் தான். புத்தக வாசிப்பை
வளர்ப்போம்.சிந்தனையை வளமாக்குவோம்.
A book is a device to ignite
the imagination.
–Alan Bennettprint this in PDF

0 கருத்துரைகள்:
Post a Comment