ஒருமுறை எமலோகத்தில்
வாழ் நாள்
முடிந்து வந்த
மரவியாபாரிக்காக எமன்
அவன் செய்த
பாவ புண்ணிய
கணக்கை சித்ர
குப்தனிடம் விசாரித்தார்
."அந்த மரவியாபாரி எந்த பாவங்களையும் செய்ய வில்லை
இருப்பினும் அவனுக்கு தண்டனை தர வேண்டும் பிரபு"
என சித்ர
குப்தன் கூறினான்.
மரவியாபாரி உடனே மறுத்து எனக்கு
எதற்கு தண்டனை என கேட்டான்.
சித்ர குப்தன் எமனிடம், “பிரபு இம்மரவியாபாரி பல மரங்களை வெட்டி
உள்ளான். அதனால்
இவன் வாழ்ந்த
இடத்தில மழை இல்லாமல் பயிர்களும்,விலங்குகளும் மனிதர்களும் வாடினார். அதை தவிர வேறு
ஒரு பாவமும்
செய்ய வில்லை.
எனவே இவனுக்கு தக்க தண்டனை தருமாறு கேட்டு
கொள்கிறேன் பிரபு” என முடித்தான்.
மரவியாபாரி மறுத்தான். “ மரம் வெட்டுவது எனது
தொழில் அதுவும்
குலத்தொழில் இதையே எனது முன்னோர்களும்
செய்தனர் அதையே
நானும் செய்தேன் அது எப்படி
பாவமாகும்? எனது தந்தை கூட இத்தொழிலையே செய்தார்.எனது தந்தை
செய்ததையே நானும்
செய்தேன் அவருக்கு மட்டும் சொர்க்கமும் எனக்கு மட்டும்
தண்டனையா? “என மரவியாபாரி கோபமுற்றான் .
சித்ர குப்தன் குறுக்கிட்டார் “மரவியாபாரியே நீ சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால்
உனது தந்தை
ஒரு மரம்
வெட்டினால் இரண்டு
மரம் வைத்து வளர்த்தார்.நீயோ அந்த இரண்டு மரத்தினையும் வெட்டினாய். எனவே
பிரபு, இம்மர வியாபாரிக்கு இனி தாங்களே தக்க
ஒரு தண்டனையை தர வேண்டும்” என எமனிடம்
சிபாரிசு செய்தார் .
எமன் தண்டனையை அறிவித்தார்.
“மரவியாபாரியே நீ பாவங்கள் ஒன்றும் செய்யாமல் உனது தொழிலையே செய்தாலும் உன்னால் இப்பூமியும், விலங்கும்,மரசெடிக்கொடிகளும் மழை இல்லாமல் அவதிப்பட்டதால் நீ மூன்று ஜென்மங்களில் மீண்டும் பிறக்க உத்தரவிடுகிறேன். முதல் ஜென்மத்தில் மரசெடிக்கொடிகளின் விதைகளை தூவும் பறவையாகவும் இரண்டாம் ஜென்மத்தில் அவ்விதைகளை பயிராக்க உழும் எருதுகளாகவும் மூன்றாம் ஜென்மத்தில் மரம் வளர்க்க வேண்டும் எல்லா மனிதர்களிடமும் அறிவுறுத்தியும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று செடிகளை நட்டு வளர்க்கும் மனிதனாகவும் பிறக்க வேண்டும் “ என்பதே நான் உனக்கு அளிக்கும் தண்டனையாகும்.
குசும்பு குடுமியாண்டி : இக்கதையை நான் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.நன்றாக இருக்கிறது ஆனால் இக்கதைக்கும்
நடிகர் விவேக்கும் என்னவோ தொடர்பு இருப்பதாகவே
தோணுது

0 கருத்துரைகள்:
Post a Comment