Saturday, March 23, 2013

மரம் - மரம்

என் கிளைகள்
பக்கத்து சுவற்றை தாண்டி
எட்டிப் பார்க்கும்
தோட்டக்காரன்
திமிர் பிடித்தவன்
வெட்டிவிட்டான்.

என் காய்கள் பழமாகுமின்னே
தோட்டக்காரன்
திமிர் பிடித்தவன்.
பறித்து விட்டான்.

என் மேல் கட்டிய
குருவிக்கூட்டை
தோட்டக்காரன்
திமிர் பிடித்தவன்
கலைத்து விட்டான் .

வெயில் வந்தது
தாங்கினேன்
மழை வந்தது
குளித்தேன்
புயல் வந்தது
முறித்து பார்த்தது
நான் அசரவில்லை.

தோட்டக்காரன்
திமிர் பிடித்தவன்.
என்னை செதுக்கி இருந்தான்.

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms