ஜுன் 21
- உலக யோகா தினம்
யோகம் என்ற பதம் ‘யுஜ்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வருவது. யுஜ் என்றால் இணைவது. மனிதன் எவற்றோடு
இணைய வேண்டும் என்பதில்தான் அடிப்படை உள்ளது.
நான்கு வகையான மனிதர்கள் உள்ளதாக உளவியல்
ஆராய்ச்சியாளர்கள் வகுத்து உள்ளனர்
எதையும் ஆராய்பவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், எதையும் மனதால் பார்ப்பவர்கள்,செயல்புரிபவர்கள். இந்த நான்கு வகை
மனிதர்கள் பின் பற்றும் வழி முறைகள் பலவாக இருப்பினும் கீழ் காணும் இந்த நான்கு
யோகம்களில் எல்லாமே அடங்குகிறது.
காரியங்களை சுயநலமின்றி பொது நலத்துக்காகச் செய்தால்
அது கர்ம யோகம்.
நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருசேரத் திரட்டி, ஓர் இஷ்டதெய்வத்திடம் குவித்து, அவருக்காகவே நம்
ஐம்புலன்களின் காரியங்களைத் திருப்புவதே பக்தி யோகம்.
நாம் நமது உடல்ரீதியான, மனரீதியான, புத்திரீதியான வாழ்க்கையை மட்டும், அவை தரும்
உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பற்றிக்கொண்டு மட்டும் வாழாமல் அதற்கு மேல் அல்லது அதன் அடி ஆழத்தில் உள்ள ஞானப் பெட்டகமாக
உள்ள நம் உண்மை நிலையை அறிய வைப்பது ஞான யோகம்.
அந்த உண்மை நிலையை உடல் தவம், மனத்தவம் செய்து மூச்சுக் காற்றான பிராணனை அடக்கி அதன்மூலம் ஆன்மாதான் நாம்
என்பதை உணர்த்துவது ராஜ யோகம்.
மனிதன் தனக்குத் தானே இணக்கமாக இருக்க வேண்டும். அவனது
அறிவு ஒன்றாகவும், மனது வேறொன்றாகவும் செயல் படும்போதுதான்
அவன் தவறுகளைச் செய்கிறான். தான் செய்வது தான் சரி என்று வாதாடுகிறான். அப்படிப்பட்ட மனிதன், தானே தனக்கு எதிரியாக, தன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான்.
அடுத்து, மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் மனிதன்
இணக்கமின்றி
இருக்கிறான்.மேலும் வாழ்க்கையில்
எந்த உயர் நோக்கமும் இல்லாதவனாக,
தனக்குத் தானே ஒரு சுமையாக இருந்து
மறைகிறான்.
இம்மனிதன் தன் உடலை,மனதை
கட்டுபடுத்த இந்த யோகா தேவையானதாக இருக்கிறது. இது வெறும் ஆன்மீகம், மதம், மூடநம்பிக்கை எனும்
ஒருவழிப்பாதை அல்ல. மனிதன் மனிதத் தன்மைக் கொள்ளவும், தன் இனம் தவறு அற்று செயல்படவும்
“யோகா” அவசியமே.

8 கருத்துரைகள்:
சின்னதான சாரமான பதிவு.
மிகப் பிடித்தது....
நன்றி ஐயா.
மிக்க நன்றி
The Message is very true. Everyone should go in depth of each word.
C.S.Sankaranarayanan, Velachery.
யோகா அனைவருக்கும் அவசியமே. இருப்பினும் நான் யோகா செய்வதில்லை. உடற்பயிற்சி மட்டும் செய்கிறேன். தற்போது இந்த யோகாவிலும் அரசியல் என்று நினைக்கும்போது வேதனை.
Good thought very nice
This is Anand
யோகா தினத்தன்று, நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி! விரிவான விளக்கங்கள் அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி!
@‘தளிர்’ சுரேஷ்மிக்க நன்றி ,உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
Post a Comment