Tuesday, June 16, 2015

ஜுன் 21 - உலக யோகா தினம்


ஜுன் 21 - உலக யோகா தினம்

ஒரு உயர்ந்த குறிக்கோளை நோக்கி அடியெடுத்து வைக்க முதலில் அதற்க்கான வழி முறைகளை அறிந்து,அதனை செயல் படுத்த, அதனை அடைய தேவையான சிந்தனை தேவை. அதேபோல் மனிதன் பிறந்ததே வாழத்தான். அதற்கு அவனுக்கு நீண்ட ஆயுள் தேவை. அதனால் அவன் அந்த ஆயுளை அதிகரிக்க அவனது உடலையும் உயிரையும்  அழிவிலிருந்து காப்பாற்றி கொள்ள உணவு, உறைவிடம், உடை,உடற்பயிற்சி, மருத்துவம், மருந்து என பல முறைகளில் செயல்பட முதலில் எடுத்துக் கொண்டது உணவுக்கு பிறகு  உடல்-பயிற்சியைத்தான். அதில் முதன்மையானது சிறுசிறு மூச்சுப் பயிற்சிதான்.  இவையே பின் பல முறையாய் பயின்று உடல் பயிற்சியோடு கூடி யோகா என மாறியது.

யோகம் என்ற பதம் யுஜ்என்ற வேர்ச்சொல்லில் இருந்து வருவது. யுஜ் என்றால் இணைவது. மனிதன் எவற்றோடு இணைய வேண்டும் என்பதில்தான் அடிப்படை  உள்ளது.

நான்கு வகையான மனிதர்கள் உள்ளதாக உளவியல் ஆராய்ச்சியாளர்கள் வகுத்து உள்ளனர்

எதையும் ஆராய்பவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், எதையும் மனதால் பார்ப்பவர்கள்,செயல்புரிபவர்கள். இந்த நான்கு வகை மனிதர்கள் பின் பற்றும் வழி முறைகள் பலவாக இருப்பினும் கீழ் காணும் இந்த நான்கு யோகம்களில் எல்லாமே அடங்குகிறது.

காரியங்களை சுயநலமின்றி பொது நலத்துக்காகச் செய்தால் அது கர்ம யோகம்.

நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருசேரத் திரட்டி, ஓர் இஷ்டதெய்வத்திடம் குவித்து, அவருக்காகவே நம் ஐம்புலன்களின் காரியங்களைத் திருப்புவதே பக்தி யோகம்.

நாம் நமது உடல்ரீதியான, மனரீதியான, புத்திரீதியான வாழ்க்கையை மட்டும், அவை தரும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பற்றிக்கொண்டு மட்டும் வாழாமல் அதற்கு மேல் அல்லது அதன் அடி ஆழத்தில் உள்ள ஞானப் பெட்டகமாக உள்ள நம் உண்மை நிலையை   அறிய வைப்பது ஞான யோகம்.

அந்த உண்மை நிலையை உடல் தவம், மனத்தவம் செய்து மூச்சுக் காற்றான பிராணனை அடக்கி அதன்மூலம் ஆன்மாதான் நாம் என்பதை உணர்த்துவது ராஜ யோகம்.


மனிதன்  தனக்குத் தானே இணக்கமாக இருக்க வேண்டும். அவனது அறிவு ஒன்றாகவும், மனது வேறொன்றாகவும் செயல் படும்போதுதான் அவன் தவறுகளைச் செய்கிறான். தான் செய்வது தான் சரி என்று வாதாடுகிறான். அப்படிப்பட்ட மனிதன், தானே தனக்கு எதிரியாக, தன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான். அடுத்து, மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் மனிதன் இணக்கமின்றி இருக்கிறான்.மேலும் வாழ்க்கையில் எந்த உயர் நோக்கமும் இல்லாதவனாக, தனக்குத் தானே ஒரு சுமையாக இருந்து மறைகிறான்.


இம்மனிதன் தன் உடலை,மனதை கட்டுபடுத்த இந்த யோகா தேவையானதாக இருக்கிறது. இது வெறும் ஆன்மீகம், மதம், மூடநம்பிக்கை எனும் ஒருவழிப்பாதை அல்ல. மனிதன் மனிதத் தன்மைக் கொள்ளவும், தன் இனம் தவறு அற்று செயல்படவும் யோகா அவசியமே.


Print Friendly and PDF

8 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சின்னதான சாரமான பதிவு.
மிகப் பிடித்தது....
நன்றி ஐயா.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக்க நன்றி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

The Message is very true. Everyone should go in depth of each word.
C.S.Sankaranarayanan, Velachery.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யோகா அனைவருக்கும் அவசியமே. இருப்பினும் நான் யோகா செய்வதில்லை. உடற்பயிற்சி மட்டும் செய்கிறேன். தற்போது இந்த யோகாவிலும் அரசியல் என்று நினைக்கும்போது வேதனை.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Good thought very nice

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

This is Anand

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யோகா தினத்தன்று, நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி! விரிவான விளக்கங்கள் அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி!

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@‘தளிர்’ சுரேஷ்மிக்க நன்றி ,உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms