கட்டுண்டோம்
பொறுத்திருப்போம்.
காலம் மாறும்
என்றான் பாரதி.
ஒன்றுபட்டோம்
கைகோர்த்தோம்
காலம் மாறியது
என்றான் காந்தி.
ஆகஸ்டு பதினைந்து
ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம்.
ஆவேசமானது சங்கொலி!
ஆணையிட்டாள் சுதந்திரதேவி!
வெள்ளையன் கொடி
கீழே இறங்கியது.
பாரதக்கொடி
மேலே பறந்தது.
அஹிம்சை வென்றது!
அகிலம் வாழ்த்தியது!
நன்னாள்!
இனிய பொன்நாள்!.
பெற்ற சுதந்திரத்தை
பேணிக் காப்போம்!.
பெருமைக் கொள்வோம்!.
சபதம் செய்வோம்!.
வெற்றி இந்தியா
வல்லரசு இந்தியா
விவேக இந்தியா
வாழ்க இந்தியா.

4 கருத்துரைகள்:
பெற்ற சுதந்திரத்தை
பேணிக் காப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
அருமையான கவிதை! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
Post a Comment