Saturday, September 12, 2015

கடன்காரர் - குட்டிக்கதை



ஏன்யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் 
வாங்கியது எப்போது?”
-
ஒரு மாதத்துக்கு முன்னே”.
-
 “எப்போது தருவதாகச் சொன்னேன்?”
-
 “இருபது நாளில்”.
-
 “கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”
-
ஆமாம்”.
-
 ”பின்னே ஏன்யா வந்து கேட்கவில்லை?”
-
 “நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.
-
 “நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர 
வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து 
நான் அலைய வேண்டுமா?”
-
மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள்
 என்று நினைத்தேன்”.
-
 ”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”
-
 “உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து 
விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?”
-
 “இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா
இருநூறு வாங்கின நான் கேவலமானவன் என்று குத்திக் 
காட்டுகிறாயா?”
-
 “ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி 
எறிந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
-
 “என்னது? எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா. 
பொருள்தனைப் போற்றி வாழ்என்று ஒளவையார் 
சொன்னதைப் படித்ததில்லையா?”
-
 “நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக் 
கொள்வேன்”.
-
எப்போது?”
-
நாளைக் காலையிலே”.
-
கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால் 
நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.
-
 “கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.
-
வார்த்தை தவற மாட்டாயே?”
-
 “மாட்டேன்.
-
ஜாக்கிரதை! காத்திருப்பேன்!
-
---------------------------------------
> சொ.ஞானசம்பந்தன் (ஆனந்த விகடன், -ஒருநிமிடக் கதை, )


Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

3 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இப்படியும் ஆள் இருக்கிறார்களா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல காத்திருப்பு.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடனும் கொடுக்கலும் வாங்கலும்...
உலகம் பலவிதம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms