வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, May 18, 2012

கவிதை -2 பொய்


கவிதை -2

மூன்றுஎழுத்து கவிதை ஒன்றை சொல்லேன்
காதலி என்றேன்.
'அம்மா ' என்று சொல்லக்கூடாதா
அம்மா வருத்தப்பட்டாள்.
அம்மா நீ
'அன்பு' என்ற மூன்றெழுத்தின் உண்மையென்றேன்.
காதலியோ
'பொய்' என்ற இரண்டெழுத்தின் நிஜமென்றேன்.
அடப்பாவி என்று ஆச்சரியமுற்றாள்.
கவிதைக்கு 'பொய்'அழகுத்தானே.

- Arrow சங்கர்

பார்வையற்ற துறவி


மௌனக் கதைகள் - 2
பார்வையற்ற துறவி
வான்மீகீயூர் L.L.சங்கரின் மௌனக் கதைகள் தொகுப்பிலிருந்து 
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் “ ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி, “ இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, “ ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்.” என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு கூறினான்.
உடனே துறவி, “ மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்.” என்றார்.
மிகவும் வியந்த அரசன், “ துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.
“அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்.”
முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்.” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.
Print Friendly and PDF

தானாக வந்த தத்துவம் -2


தானாக வந்த தத்துவம் -2

சீனபழமொழியிலிருந்து

மீன் சாப்பிட கற்றுக்கொடுத்தால் ஒருநாள் மட்டும் சாப்பிடுவான்
மீன் பிடிக்க  கற்றுக்கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவான்


நண்பர் சீனீவாசன் வர்கள் என் வலைப்பதிவிற்கு அனுப்பிய சுவாரஸ்யமான நல்ல பழமொழி இது.   திரு.சீனீவாசன் வர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றி.

தானாக வந்த தத்துவம் -1


தானாக வந்த தத்துவம் -1




திருவான்மீயூர் முடிதிருத்தகமொன்றில் (26.02.2012)

முதலாமவன் : என்ன மச்சான் புது போனா?
இரண்டாமவன் : ஆமான்டா டுயல் சிம்மு, கேமரா கூட இருக்குடா.
முதலாமவன் : போதும்டா. இருக்குறத வச்சி அட்ஜஸ் பண்றதுதான்டா லைப்பே!

கவிதை -1 காதல்


கவிதை -1


காதல்
நான் சொன்ன கதை௧ள்
நீ சிரித்தபோது
விழுந்த முத்து  விதை௧ள்
இரண்டும் ஒன்றானது
-வி-தை

- Arrow சங்கர்
   

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms