Wednesday, May 30, 2012

கலைமகளின் குரு

எப்போது மனித முயற்சிகள் தோற்றுப்போய் , ஏதாவது வழி கிடைக்காதா எனும் ஏங்கும்போது, இறைவனின் திருவடிகளை தவிர இளைப்பாற  வேறு  இடமே இல்லை. இதை ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதோ ஒரு தருணத்தில் நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.
நாம் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நமக்கு துன்பங்களும், துயரங்களும் நம் வாழ்வில் தொடரும். ஆனால், தீவிர இறைவழிபாடு , அந்த கர்மங்களின் தாக்கத்தை பெருமளவில் குறைத்து , கஷ்டங்களை தாங்கும் சக்தியை நமக்கு கொடுக்கும்.
சிக்கல்கள் தீர்ந்தவுடன் , திரும்பவும் நம் மனம் முருங்கை மரமேறி விடுகிறது. ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் மட்டும் , அந்த சூட்டை உணர்ந்து தங்கள் வாலை சுருட்டி கொண்டு , ஒழுங்கான பிள்ளைகளாய்  கடவுளை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இறை வழிபாடு - ஹயக்ரீவர் காயத்ரி, துதி, ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
ஹயக்ரீவர். திருமாலின் மிக சக்தி வாய்ந்த மூர்த்தங்களில் முக்கியமானவர் ஹயக்ரீவர். ஆனால், இதுவரை ஒரு ரகசியம் போலவே மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது. ஹயக்ரீவர் , கலைமகளுக்கே குரு வாக மதிக்கப் படுகிறார். 
கல்வி பயிலும் குழந்தைகள் , நல்ல ஞானம் பெற ஹயக்ரீவரை வழி பட, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல நிலை அடைவது உறுதி. சினிமா, தொலைக்காட்சி போன்ற வெகுஜனத் தொடர்பு உடைய துறைகளை தேர்ந்து எடுப்பவர்கள் , இவரை வழிபட , அவர்கள் தடைகள் நீங்கி , பிரபலம் அடைவர். இது ஏன் என்பது, அவரது அவதார வரலாற்றை அறிந்து, அவரை வழிபட நம் வாழ்வில் படிப்படியாக ஏற்படும் மலர்ச்சியை வைத்து உணர்ந்து கொள்ள முடியும்.


அவதாரம் :
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.

தியான காயத்ரி : 
ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

துதி :
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

பொருள் : ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசியுங்கள். நீங்கள் ஜெயிப்பது நிஜம்!


ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
ஓம் ஹயக்ரீவாய நம:
ஓம் மஹாவிஷ்ணவே நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஸ்வம்பராய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸர்வவாகீஸாய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிராகாராய நம:
ஓம் நிரீஸாய நம:
ஓம் நிருபத்ரவாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் சிதாநந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் ஸர்வதாயகாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லோகத்ரயாதீஸாய நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸாரஸ்வதப்ரதாய நம:
ஓம் வேதோத்தர்த்ரே நம:
ஓம் வேதநிதயே நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் புரதநாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பூரயித்ரே நம:
ஓம் புண்யாய நம:
ஓம் புண்யகீர்த்தயே நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பரேஸாய நம:
ஓம் பாரகாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸகலோநிஷத்வேத்யாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் ஸர்வஸாஸ்த்ரக்ருதே நம:
ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்ரா யுக்தஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் ஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ஜிதக்ரோதாய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜராம்ருத்யுஹராய நம:
ஓம் ஜிவாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜாட்யநாஸதாய நம:
ஓம் ஜபப்ரியாய நம:
ஓம் ஜபஸ்துத்யாய நம:
ஓம் ஜபக்ருதே நம:
ஓம் ப்ரியக்ருதே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் விமலாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விதிஸ்துதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் சிவஸ்துத்யாய நம:
ஓம் ஸாந்திதாய நம:
ஓம் க்ஷõந்தி பாரகாய நம:
ஓம் ஸ்ரேய: ப்ரதாய நம:
ஓம் ஸ்ருதிமயாய நம:
ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் ப்ராணதாய நம:
ஓம் ப்ருதிவீபதயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் வ்யக்த ரூபாயை நம:
ஓம் ஸர்வஸாக்ஷிணே நம:
ஓம் தமோஹராய நம:
ஓம் அஞ்ஞாநநாஸகாய நம:
ஓம் ஜ்ஞாநிநே நம:
ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நம:
ஓம் க்ஞாநதாய நம:
ஓம் வாக்பதயே நம:
ஓம் யோகிநே நம:
ஓம் யோகீஸாய நம:
ஓம் ஸர்வகாமதாய நம:
ஓம் மஹாமௌநிநே நம:
ஓம் மஹாயோகிநே நம:
ஓம் மௌநீஸாய நம:
ஓம் ஸ்ரேயஸாம்நிதயே நம:
ஓம் ஹம்ஸாய நம:
ஓம் பரம ஹம்ஸாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விராஜே நம:
ஓம் ஸ்வராஜே நம:
ஓம் ஸுத்தஸ்படிக ஸங்காஸாய நம:
ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய நம:
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம:
ஓம் ஸர்வவாகீஸ்வரேஸ்வராய நம:



0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms