நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.ஆயினும் மனிதன் பிறக்கும் போதே நோய்களும் மனிதனுடனே பிறந்துவிட்டன. இதனை ஒழிக்க மருத்துவ உலகம் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் சூழ்நிலைகளினாலும் தவறான ௨ணவுபழக்கங்களினாலும் நெறிமுறையற்ற வாழ்க்கை முறைகளாலும் நோய்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நோய்களினால் மனித இழப்பும், மனிதலாற்றல் இழப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு தீர்வாக மருத்துவர்கள் மட்டுமே செயல்பட முடியாது. மனிதனின் முழுமுற்சியும், தன்னார்வமும், சுய விழிப்புணர்ச்சியுமஂ மிக அதிகமாக நோய் தீர்க்க வழிவகுக்கிறது. அதற்கு நோய்பற்றியும், நோயின் தாக்குதல் பற்றியும் அறிவினை பெற வேண்டும்.இதனை மருத்துவர்கள் மட்டுமே போராட வேண்டும் என்கிற தார்மீக பொறுப்பில்லை. தன்னார்வமிக்க ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட. எனவேதான் எனது முதல் முயற்சியாக, நடுக்குவாதம் (Parkinson's disease) &பக்கவாதம் (Stroke) என்கிற நோயறிவு நூலாக இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூலில் குறிப்பிட்டப் பட்டுள்ள கருத்துக்களும், தீர்வுகளும் நான் படித்த, கேட்க பெற்ற விஷயங்களே. எனது சுய சிந்தனையினாலோ அல்லது அனுபவத்தினாலோ எழுதவில்லை எனினும் இந்நூல் நோயைப் பற்றி அறியவும் அதனை தவிர்க்கவும், தீர்க்கவும் வழி வகுக்கும் என நம்புகிறேன்.
நடுக்குவாதம் (Parkinson's disease) &பக்கவாதம் (Stroke) என்கிற நோயறிவு நூலை மின் புத்தகமாக(e- book) பெற கீழே ௨ள்ள லிங்கினை அழுத்தி டவுன்லோடு செய்யவும்
0 கருத்துரைகள்:
Post a Comment