வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, November 20, 2013

கொடிய நரகங்கள்

1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர்அடையுமிடம் தாமிரை நரகம்.  2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில்இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். 3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப்பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும். 4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்துதுன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும். 5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில்வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம். 6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும்நரகம் காலசூத்திரம். 7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்தஅதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும். 8...

Monday, November 18, 2013

அம்மா உணவகத்தில் சப்பாத்தி

ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயாரிக்கும் நவீன எந்திரம் மூலம், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை மறுநாள் (21.11.13) முதல் ரூ.3–க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ‘காணொலி’ காட்சி மூலம் அறிமுகம் செய்து வைக்கிறார். அம்மா உணவகம் சென்னையில் வார்டுக்கு ஒன்றுவீதம் 200 வார்டுகளிலும் சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை காலை உணவாக ஒரு இட்லி ரூ.1–க்கும், பொங்கல் ரூ.5–க்கும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மதிய உணவாக ரூ.5–க்கு சாம்பார் சாதமும், ரூ.5–க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதமும், ரூ.3–க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் மாலை நேர உணவாக ரூ.3–க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர்...

Sunday, November 17, 2013

பற்களை பளிச்சென்று வைக்க

பொதுவாகவே கால்சியம் சத்து பற்களுக்கு உறுதியை அளிக்கிறது. பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்க அதனை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். பற்களை தேய்க்கிறோம் என்று பிரஷ்ஷில் பேஸ்டை வைத்து 5 நிமிடம் தேய்த்து துப்பி விடுவதால், பற்களுக்கு எந்த பெரிய நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை. அதற்கு பதிலாக பற்களை தேய்த்ததும், பல் ஈறுகளை விரலை வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்வது போல தேய்த்து விட வேண்டும். அப்போதுதான், ஈறுகளில் தேங்கியிருக்கும் கெட்ட நீர் வெளியேறி, ஆரோக்கியமான பற்களைப் பெறலாம். அதேப்போல, கருப்பு டீ, சிகரெட் பிடிப்பது, பான்பராக் சாப்பிடுவது, அடர்த்தியான நிற பழச்சாறுகளை அடிக்கடி குடித்தால் பற்களின் நிறம் மங்குகிறது. எனவே, இதுபோன்ற பொருட்களை சாப்பிட்டதும், பற்களை துலக்கினால் மங்கலான பற்கள் மாறி பளிச்சென்ற பற்களைப் பெறலாம்...

இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 வழிகள்

இதய நோய்.. அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது. உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீணி பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும். அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் ஆயில், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், க்ரிக் நாடுகளில் தங்களது பழமையான உணவுப் பழக்கத்தைக் கையாறும் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன. சிகரெட் பிடிக்காதீர் இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது.  இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது...

பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து!

தோஷங்களாகிய வாத, பித்த கபங்களின் சம்பந்தமில்லாமல் எந்தவித காய்ச்சலாகட்டும், நோய்களாகட்டும் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வெயிலில் பறக்கும் பறவை, தன் நிழலைப் பார்த்து "நீ மேற்கே போ, நான் தெற்கே போகிறேன்' என்று எவ்வாறு கூற இயலாதோ, அதைப் போலவே, நோய்கள் எத்தனை வகையானாலும், மூன்று தோஷங்களின் சேர்க்கை இல்லாமல் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த வகையில் பன்றிக்காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்தே தோஷங்களின் சீற்றத்தை ஊகித்தறிந்து வைத்தியம் செய்தோமேயானால், நோய் விரைவில் விலகிவிடும். எச்.என். வைரஸ், உடலில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோஷங்களின் உள்ளே ஊடுருவும்போது, தோஷங்கள் தம் கட்டுப்பாடுகளை இழந்து சீற்றம் கொள்கின்றன. இருமல், தும்மல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, வாந்தி, நாக்கு சுவையற்றுப்போதல், சோம்பல், நாவறட்சி,...

அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம். * தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். * ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை...

சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்

தேவையான பொருட்கள்..... விதை நீக்கிய சீதாப்பழம் - 100 கிராம், சுகர் - 200 கிராம், தண்ணீர் - 100 மி.லி. எலுமிச்சம்பழச்சாறு  -  2 அல்லது 3 துளிகள், பால் - தேவையான அளவு, செய்முறை... * விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். * தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது! ...

ஆரோக்கிய ஜூஸ்

தேவையான பொருட்கள்.... புதினா - கைப்பிடி அளவு, துளசி - கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை -கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சுக்குப் பொடி - கால் டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை- 200 கிராம், தண்ணீர் - 100 மில்லி எலுமிச்சம் பழம் -கால் பழம். செய்முறை.... * புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் நன்றாக கழுவி  மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். • அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும். • சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் ஆரோக்கி ஜூஸ் ரெடி. • அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம். • குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms