Wednesday, November 20, 2013

கொடிய நரகங்கள்

1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர்அடையுமிடம் தாமிரை நரகம். 

2 . 
கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில்இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3 .
அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப்பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. 
குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்துதுன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. 
தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில்வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. 
பெரியோரையும்பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும்நரகம் காலசூத்திரம்.

7. 
தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்தஅதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8 .
அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக்கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. 
சித்திரவதைதுரோகம்கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம்அந்தகூபம்.

10.
தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து,பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11 .
பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால்அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினிகுண்டம்.

12. 
கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும்மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. 
நன்மைதீமைஉயர்வுதாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டுஎல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம்சான்மலியாகும்.

14 .
அதிகார வெறியாலோகபடவேசத்தாலோநயவஞ்சகத்தாலோநல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தனவழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும்கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16 .
பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள்அடையும் நரகம் பிராணரோதம்.

17 . 
டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18 .
வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்குஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19 .
வீடுகளுக்கு தீ வைப்பதுசூறையாடுவதுஜீவா வதை புரிவது,விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்றசெயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20 .
பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள்அடையும் நரகம் அவீசி.

21 .
எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும்குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22 .
தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும்நல்லோரையும்அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23 .
நரமேத யாகம் புரிதல்ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம்புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினைபுரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24 .
எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல்நயவஞ்சகமாகக்கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல்நம்பிக்கைத் துரோகம்புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25 .
தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26 .
பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும்நரகம் வடாரேவதம்.

27 .
வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும்பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம்பரியாவர்த்தனகம்.

28 .
செல்வச் செருக்காலும்செல்வாக்கினாலும்பிறரைத்துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்துஅறநெறிகளில்செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம்என்பதாகும்.

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms