வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, November 29, 2015

ரூ 55 கோடியில் திருமணம்

நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் கேரளத்தில் ரவி பிள்ளை தனது மகள் திருமணத்தை ரூ. 55 கோடியில் நடத்திய திருமணம் அனைவரையும் ஈர்த்தது. திரு.ரவி பிள்ளை கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.  திருமண மேடை எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை...

Wednesday, November 25, 2015

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா

உலக பிரசித்திப்பெற்ற பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாள்  21-ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாள் 22-ம் தேதி மகா தேரோட்டமும் நடைப்பெற்றது. விழாவில் முதலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்  தீபத்திருவிழாவின் உச்சகட்டமாக 10-ம் நாளான 25.11.2015 அன்று, மகா தீபப்பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு, பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன் ஒருவனே பலவாக காட்சியளிக்கிறான் என்ற ‘ஏகன் அனேகன்' தத்துவத்தை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியில் இருந்து அம்மனி அம்மன் கோபுர...

Tuesday, November 24, 2015

கார்த்திகை தீபம்

உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இறைவன் ஏகனாய் இருந்து எங்கும் அநேகனாய் ஒளிரும் தத்துவம் ஒளி வழிபாடு அதுவே தீப வழிபாடு. நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கு ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும். எனவே இந்த மாதத்தில் முழுநிலவும் கார்த்திகை விண்மீன்களும் சேரும் நாளில் நெருப்பு ஸ்தலமான திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் எங்கும் ஒளி வெள்ளமும் ஞானமுமாய் நிறைந்திட வழிக்காட்டுகிறது. பஞ்ச பூத ஷேத்திரங்களுள் (ப்ருதிவி ஷேத்திரம் காஞ்சிபுரம், ஜலஷேத்திரம்...

Friday, November 20, 2015

மாமா மாப்ளே,...

“வாங்க மாப்ளே வாங்க ” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் வரவேற்றார் அந்த உறவினர். கும்பகோணத்தில் (26.10.2015) உள்ள என் சகலையின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியின் போது வீட்டு வாசலில் நின்று என்னை வரவேற்றார் அந்த உறவினர். “வாங்க மாமா வாங்க” என்று அவரை எதிர்க்கொண்டேன். “எப்போ வந்தீங்க மாப்ளே” என்று மேலும் குசலம் விசாரித்தார் அவர். “நான் நேத்தே வந்துட்டேன்.விடியற்காலை மூணு மணிக்கு அய்யர் வந்துட்டார் அப்பவே வந்து ஹோமத்துலே கலந்துக்கிட்டு டிபன் எல்லாம் முடிச்சுட்டு ரூமுக்கு போய்ட்டேன்.அசதியா இருந்தது கொஞ்சம் தூங்கி எழுந்துட்டு வந்தேன்”என்றேன் நான். “ஆமாம் ஆமாம் நான் அப்பவே மச்சான்கிட்டே கேட்டேன். சொன்னாரு” என்று பதில் சொன்ன அந்த உறவினர்,”வாங்க இங்கே உட்காருங்க” என்று புது வீட்டு வாசலில் போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை காட்டினார்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms