மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..
இரும்பு வியாபாரி: கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி: சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர்: வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ்: நார்மலாதான்
பெய்யுது.
பஞ்சு வியாபாரி: லேசா பெய்யுது.
போலீஸ்காரர் : மாமூலா பெய்யுது.
வேலைக்காரி : பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார் : புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர் : ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர் : சும்மா கும்முன்னு பெய்யுது
கோவில் பூசாரி : திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர் : செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர் : சும்மா புடிபுடின்னு புடிக்குது,
மேள வாத்தியக்காரர் : கொட்டோகொட்டுன்னு கொட்டுது.
மருமகள் : தொனத் தொனன்னு பெய்யுது

2 கருத்துரைகள்:
அருமை...அருமை.... உடனே
பெலத்து கயவருக்கும் வாசித்துக் காட்டி
இருவரும் சிரித்தோம்.
அவர் சரிதான் என்றார்.
மிக்க நன்றி ஐயா..
சூப்பர் மழை!
Post a Comment