வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, February 28, 2016

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்.

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று (29.02.2016) தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு : * ஊரக ஏழைக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும். * அனைத்து குடும்பத்திற்கும் ஒரு லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. * இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்த 100 விழுக்காடு அந்திய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். * 75 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு மானியத்தை கை விட்டுள்ளன. * உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு...

Friday, February 26, 2016

பயணமும் நீராடலும் பாகம்-02

இன்றுதான் (22.02.2016 திங்கட்கிழமை)  தீர்த்தவாரி திருவிழா. காலையில் இருந்தே கூட்டம். நேற்றைய முடிவு எது இன்றைய தொடக்கம் எதுவென்று அறியாமல் பக்தர்களின் வருகை தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது. நாங்கள் வீட்டிலேயே குளித்து முடிந்து சிற்றுண்டியை முடித்து விட்டு தீர்த்தவாரிக்காக தயாராய் இருந்தோம்.மணி பத்தை தாண்டியதும் ஒவ்வொரு சுவாமியும் குளக்கரைக்கு தீர்த்தவாரி திருவிழாக்காக வரத் தொடங்கினார்கள். ரிஷப வாகனத்தில் கும்பேஸ்வரர் அருள்மிகு காசி விஸ்வநாதர் ,கும்பேஸ்வரர் ,நாகேஸ்வரர் , சோமேஸ்வரர், கோடீஸ்வரர் ,காளஹஸ்தீஸ்வரர் , கௌதமேஸ் வரர்,அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர், அபிமுகேஸ்வரர்,கம்பட்ட  விஸ்வநாதர் ,  ஏகாம்பரேஸ்வரர்  என அனைவரும் வருகையிட மணி 10.50ஐ தாண்டியது. தீர்த்தவாரிகளே குளக்கரைக்கு வந்தபிறகு நாங்கள் மட்டும் வீட்டிலேயே...

பயணமும் நீராடலும் பாகம்-01

வரவேற்பு முகமாய் என் மனைவி புன்னைகையுடன் என்னை வரவேற்றாள். “சீக்கிரம் போய் குளிச்சுட்டு வாங்க”என மாலை 3 மணிக்கே அன்பு கட்டளையிட்டாள் . நான் என் மனைவி மற்றும் இருமகன்கள் உள்பட கும்பகோணம் மகாமக தீர்த்தவாரி திருவிழா செல்வதற்காக சனிகிழமையன்று (20.02.2016) தயாரானோம். ஆளுக்கொரு சுமையாக நான்கு பைகள் என எங்கள் அனைவருக்கும் தேவையான உடை, கொறிக்க கொஞ்சமாய் நொறுக்குத்தீனி மற்றும் பல இத்யாதிகளுடன் நேற்றிரவு முதலாய் தயாராக இருந்தது. ஐந்தாவதாக ஒரு கட்டைப்பிடி  பையில் தண்ணீர் பாட்டில்கள், தீர்த்தம் பிடிக்க ஐந்து லிட்டர் கேன் ஒன்று,(என் தெருவிலுள்ள பிள்ளையார் கோயிலுக்காக) இரவு உணவு,கை துடைக்க ஒரு டவல் மற்றும் போன் சார்ஜர்கள்,பவர் பேங்குகள் உடன் இப்போது தயாராகி இருந்தது. கோயம்பேடு பஸ் நிறுத்ததிலிருந்து மாலை 4.35க்கு தமிழ்நாடு விரைவு பேருந்து கிளம்பி...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms